02. மகளின் டைரி - அன்னையின் கரம் - புவனேஸ்வரி
பெண்ணரசியின் உள்ளங்கையில்
என்ன இருக்கும் ?
நாட்டை காப்பாற்றும் தைரியமா?
நாட்டு மக்களின் மீதுள்ள நேசமா?
வீராங்கனையின் உள்ளங்கையில்
என்ன இருக்கும்?
அம்பு எய்திட உதவும் குறிக்கோளா?
குறிக்கோளில் இணைந்துள்ள திடமா?
எழுத்தாளினியின் உள்ளங்கையில்
என்ன இருக்கும் ?
மடை திறந்த வெள்ளமாய் கற்பனைகளா?
கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கும் தமிழா?
தெய்வத்தின் உள்ளங்கையில்
என்ன இருக்கும்?
அகிலத்தை காப்பாற்றும் கருணையா?
கருணையில் சுரக்கும் தர்மமா?
அனைத்தையும் ஒரு நொடியில் உணர்ந்தேன்
என் அன்னையின் கரங்கள்,
கன்னத்தை அழுத்திய நொடியில் !
{kunena_discuss:779}