அழகு…!! - சுந்தர்
பிடரி முடியால் ஆண் சிங்கம் அழகு…
தோகை விரிப்பதால் ஆண் மயில் அழகு…
மனித இனத்தில் மட்டும் பெண்ணே நீ அழகு…
அன்று மட்டும் அல்ல மனித இனம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த
கடைசி நொடி வரை நீ அழகு… நீ மட்டும் தான் அழகு…
அரவணைப்பதில் அன்னையாகவும்…
சண்டையிடுவதில் சகோதரியாகவும்…
தோள் கொடுப்பதில் தோழியாகவும்…
துணை நிற்பதில் துணைவியாகவும்…
என்றுமே ஆடவணுக்கு நீ ஒரு ஆணி வேர்…
உயிர் சுமப்பதில் உனக்கு நிகர் யாரும் இல்லை…
பிறரை உயிராய் சுமப்பதிலும் உனக்கு நிகர் இது வரை
இந்த மண்ணில் யாரும் இல்லை…
பேசும் ஒரு நொடியில் சொர்க்கத்தையும்
பேசாத ஒவ்வொரு நொடியில் மரணத்தையும் காட்ட
ஏனோ பெண்ணே உன்னால் மட்டுமே முடிகிறது….
அனுதினமும் அளவிட முடியாத உனது அன்பில்
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடான கோடி உயிர்களில்
நானும் ஒரு உயிர்….
பெண்ணே! உன்னை பெற்றதன் மூலம் பெருமையடைகிறது
இந்த பூவுலகம்…
பெண் என்றாலே அழகு…!!
வெட்கம் கொள்ளும் போது பெண்மை பேரழகு…
அத்தகைய பேரழகிற்கு என் சிரம் தாழ்ந்த
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்…..