வரமா?? சாபமா??? - இந்துமதி
கண்ணிருந்தும் குருடன்தான்
யாரையும் காணாததால்.
காதிருந்தும் செவிடன்தான்
யார்பேச்சும் கேளாததால்..
வாயிருந்தும் ஊமைதான்
யாரிடமும் பேசாததால்...
அல்சீமியரோ?
நினைவொன்றும் இல்லாததால்.
ஆட்டிசமோ??
மூளை சொல்பேச்சு மறுப்பதால்..
சொர்க்கமோ???
தான் விரும்பிய உலகமாதலால்...
வேற்று கிரகமோ????
தான் மட்டுமே உலகமானதால்....
வாயில்நுழையா வியாதி
எல்லாம் வந்ததே!
வலியில்லா வாழ்வும்
உடன் வந்ததே!!
இவையனைத்தும்
ஒருங்கே கொண்ட
தனிமையே!!!
நீ
வரமா?? சாபமா???
{kunena_discuss:779}