ஏக்கம் - பிரதாப் சந்தர் சிவகாந்தி
ஏனோ எனக்குள் பக்கம் பக்கமாய் ஏக்கம்..
பக்கத்தை திருப்புவதற்கு நேரமில்லாமல் ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்..
இங்கேயும் ஒரு ஏக்கம் எட்டி பார்க்கின்றது..
எட்டிய ஏக்கத்தை வேறு பக்கத்திற்கு மாற்றி எழுதி..
அதே பக்கத்தில் உட்கார்ந்து ஏங்கி போன ஏக்கத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்..
ஏக்கத்திற்கு முற்று வைத்தேன் என் கவிதையில் மட்டும்..
{kunena_discuss:779}