எங்கும் இல்லா… – ஷாஃப்ரின்
யாரும் இல்லா தனி நிலத்தில்
நீ எனக்கு துணை நின்றாய்!
நீ அழும்பொழுது நான் அழுதேன்
நான் அழும்பொழுது நீயும் அழுதாய்!
காரணம் இன்றி நான் சிரித்தேன்
புரியாமல் நீயும் சிரித்தாய்!
மற்றோர் என்னை தூற்றினர்
என்னை நீ இறுக்கி பிடித்தாய்!
பிறர் என்னை புகழ்ந்தனர்
அப்பொழுது என் தோள் தட்டினாய்!
வழி தெரியாமல் தவித்தேன்
ஆபத்தென்ற போதிலும் உதவினாய்!
காதலில் வீழ்ந்தேன், எனக்காக
மாமாவாய் மாறினாய்!
காதலில் மீண்டெழுந்தேன்
தேவதாசாகாமல் என்னை காத்தாய்!
விரக்தியில் உன்னை நாய் என்றேன்
எதையும் தாங்கும் இதயமாய் நின்றாய்!
தனி மரமாய் நிற்க நேர்ந்தேன்
யாரும் இல்லாதபோதிலும் நீ இருந்தாய்!
கண்டவர் அனைவரும் நம்மை உலகிலில்லா
மதி மங்கியவர்கள் என்றனர், நீயோ
ஆம் என ஒப்புக் கொண்டாய்!
ஆம்தான் புனிதமான எங்கள் உறவான இது
நட்டு கழன்ற ‘நட்பு’ என்றாய்!!!
{kunena_discuss:779}