(Reading time: 1 - 2 minutes)

காதல் கடிதம் - முத்துலட்சுமி

love

அன்பே வடிவான என் ஆருயிர் காதலனுக்கு

நான்  வரையும் மடல்,

 

உன் மீதான என் அன்பை 

வெளிப்படுத்த கவிதை எனும்

தூதுவனின் உதவியை நாடினேன்.

 

அதை வார்த்தையால் தொடுக்க நினைக்கையில் 

என் மனதில் ஒரு சிறு ஐயம்,

 

உனக்கும் எனக்குமான 

மிக அழகான தருணங்கள் 

நமக்கானது மட்டுமே,

அதை வார்த்தைகளால் வடித்து 

பிறர் பார்வைக்கு வைத்தல் முறையோ என்று,

 

மறுநொடியே  ஐயம் கரைந்து 

வந்த வழி அறியாமல் சென்றுவிட்டது.

 

இதை காட்டிலும் மிக  உசிதமான 

வழி இருப்பதாக தோன்றவில்லை 

உன் மீதான என் மையலை வெளிபடுத்த.

 

ஆதலால், வடிக்கிறேன் இக்கவியை 

உனக்காக.

 

இதில் எதையும் குறிப்பிடாமல் 

இருப்பது உன்னை உதாசீனப்படுத்த அல்ல,

நம் வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வுகளை 

உனக்கு அடிக்கோடிட்டு காட்ட.

 

இதை படிக்கும் பொழுதினில் 

உன்னுள் தோன்றும் உணர்வுகளை 

அறிய விழைகிறேன். 

 

இப்படிக்கு,

உன்னவள்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.