நன்றி - மலர்மதி
பார்த்த நாள் முதலாய் உனை ஒதுக்கி
உன் பெயர் கேட்கும் திசையையும் திரும்பி பாராதவள்
இன்றோ....
உன் நிலை அறிய
உனை சார்ந்தோரின் சுகம் அறிய
வழியறியாது கலங்கி நின்றேன்
என்னுள் உறைந்திருக்கும் அன்பை
அடையாளம் காட்டிய வருண தேவனுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்......
{kunena_discuss:779}