வாழ்வின் ஜீவன் அவன் - ஸ்ரீதேவி
உன் பேரை சொல்லி கர்வம் கொள்ளும் மனதிடம்,
நீ என்னவன் இல்லை என எப்படி சொல்லி புரிய வைப்பேன் !
உன்னோடு தான் வாழ்வும் சாவும் என உரைக்க ,
விதிக்கப்படவில்லை எனக்கு,
ஆனால் என்னால் உனக்காக தான் ,
வாழ்வும் சாவும் என வாழ இயலுமே என்னால்!
உனக்காக காத்திருக்க பழகி விட்டேன் ,
இந்த வாழ்வு எத்தனை தூரம் என அறியேன்!
எந்த எல்லை வரை காத்திருக்க இயலுமோ ,
அந்த எல்லை வரை காத்திருப்பதாய் ,
காதல் கொள்கிறேன் .
சில நேரம் உடைந்து அழுகிறேன் ,
உருகி கேட்கிறேன் இறைவனிடம்
உன்னை தரச் சொல்லி ,
தந்து விடப்பா என கேட்க நீ என்ன வாழ்வின் தேவையா ?
வாழ்வின் ஜீவனடா நீ !
{kunena_discuss:779}