(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அவன் யாரோ யாரோ தெரியாதே..!! - டோனா

Love

காதல் இதுதானா...
யாரும் நுழையாத என் 
மனவாயிலில் நுழையப்போகும்
சஹாயனே..
யாரடா நீ..
எங்கேயடா நீ..

தனிமையில் கடற்கரை மணலில்
கால் புதைய நடக்கையிலே
ரசிப்பது அலைகளையல்ல...
எங்கேனும் கடற்கரை மணலில் 
உன் கால்கள் புதைய நீ 
நடைப்போடும் என் கற்பனையை தான்..

மழலையின் சிரிப்பை ரசிக்கையில்
என் கற்பனையோ இதுவரைக் கண்டிராத 
உன் காந்த சிரிப்பை நோக்கி 
என்னை இழுப்பதும் ஏனடா??

குழந்தைகளின் குறும்பை காண்கையில்
என் கற்பனையோ இதுவரைக்
கேட்டிராத
உன் குறும்புகளை எண்ணி
என்னை மலரவைப்பதும் ஏனடா??

திருமண பத்திரிக்கைகள் காண்கையில்
என் கற்பனையோ என் பத்திரிக்கையில்
உன் பெயர் என்னவாய் இருக்குமென
யோசிக்க வைப்பதும் ஏனடா??

காதல் ஜோடிகளைப் காண்கையில்
என் கற்பனையோ என்னில் கரையபோகும்
உன்னை எண்ணி 
சிலிர்க்க வைப்பதும் ஏனடா??

நீ யாரென அறியாமலே வந்த
இந்த காதல் முற்றி 
என்னை பித்தாக்கும் முன்னர்
என் கண் முன்னே தோன்றி
என் கரத்தினை பற்றிக்கொள்வாயா
என் மன்னவனே...??

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.