கவிதை - நிலையற்ற வாழ்வு! - ஆர்த்தி N
நித்தமும் நில்லாமல் ஓடும் நாம்
ஒரு நிமிடம் நமது ஓட்டத்தை நிறுத்தி
நம் வாழ்கையை ஒரு பார்வையாளனாக
பார்த்தால் புரியும் நமது தேடலிற்கான
ஓட்டம் நிலையற்றதே..
விடைத் தெரியா கேள்விகளும்
நிலையற்ற வாழ்வுமே இப்புவி வாழ்க்கை
பிறகேன் தோழா வஞ்சமும் நஞ்சுமாய்
உன் தூய உள்ளத்தை மறைக்கிறாய்?
களைந்திடு தீய எண்ணங்களை
நிரப்பிடு அன்பால் உன் உள்ளத்தை
நிலையற்ற இவ்வாழ்வில் எல்லையில்லாமல்
அன்பை செலுத்திப்பார், பெற்றுவிடுவாய்
ஆயிரமடங்கு அது போல் அன்பை!
{kunena_discuss:779}