(Reading time: 1 - 2 minutes)

கவிதை - சிரஞ்சீவியாய் என் காதல் - அனிதா சங்கர்

love

என் காதல் உணரவுமில்லை

உணர்த்தவுமில்லை

உணர்வுகளை இழந்த பின்பு

உணர்ந்தும் என்ன பயன்...??

 

காதல் என்னை தீண்டாது

என கர்வம் கொண்டிருந்தேன்

பெண்னென்று கூட பாராமல்

என்னை தீண்டிவிட்டாள்

அந்த காதல் தேவதை

 

இருந்தும் அவளிடம் வேண்டிக்கொள்கிறேன்

அவனால் என்னுள் நுழைந்த

காதல் காற்று

என்னால் அவனுள் நுழையக்

கூடாதென்று,ஏனென்றால்

அவன் வந்துக் கோரினால்

என்னால் மறுக்க முடியாது

நான் படும் வேதனை அவனை

தீண்டக்கூடாதென்று...

 

கதைகளில் வருவதுபோல

என் காதல் கைக்கூடவும்

வழிகள் இருக்கலாம்,ஆனால்

அது என்னை சார்ந்தவர்களை

பாதிக்குமென்றால்

தாயின் உயிர்க்கு ஆபத்து என்றால்

அவள் கருவில் உள்ள உயிரை

அழிப்பதில்லையா..??

அதுபோலதான் கலைத்துவிட்டேன்

என் காதலை அல்ல

அதன் கனவுகளை மட்டும்தான்

கலைத்துள்ளேன்..

அதன் நினைவுகளை அல்ல

 

மறையாத தழும்பினை போன்று

எனது மூளையின் நினைவுபட்டகங்களில்

பாதுகாக்கப்படும் ஒரு பொக்கிஷத்தைப்போல

என் காதல்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.