கவிதை - காதல் எனும்...! - சமீரா
தூரத்தில் கேட்கும் உன் காலடி சத்தம்
என் இதயத்தில் தொடுக்கும்
மின்சார யுத்தம் !
மின்னலாய் தெறிக்கும் உன் விம்பம்
என் விழிவழியில் நிரந்தரமாய் தங்கும்
நித்தமும் உன் நினைவு
உள்ளமதில் நொடியில் ஊடுருவும்!
முழு நீள திரைப்படமாய் என் காதல்
தினம் தினம் ஊற்றெடுக்கும்!
நீ அறியாமல் உன்னை பார்ப்பேன்!
காதலை சொல்ல தருணம் எதிர்பார்ப்பேன்!
என்னுள் தயக்கம் எனும் தடுமாற்றம்!
அதற்கு கொடுக்க முடியவில்லை
என்னால் இடமாற்றம்!
காதலை உன்னிடம் சொல்லமுடியாமல்
தொடரும் இந்த போராட்டம்!
இது தானா? காதலெனும்
கண்ணாம்பூச்சி ஆட்டம்!
{kunena_discuss:779}