என்பேனா !(?) – கலைவாணி
என் மன வயலில் முளைத்த எண்ணங்களை
எழுத்து எனும் நாற்றாக்கி
நடவுச் செய்கிறாய் என்பேனா ?
என் உணர்வுகளை உயிர்ப்பெறச் செய்து
காகிதத்தை கதையாய், கவிதையாய்
உருமாற்றுகிறாய் என்பேனா ?
என் ஏற்புகளையும் மறுப்புகளையும்
உன்(ண்)மை கொண்டு
உறுதிப்படுத்துகிறாய் என்பேனா ?
என் தனிமை ரணங்களை
உன் கூர்முள்ளால் கிழித்து
குணப்படுத்துகிறாய் என்பேனா ?
உச்சமாய் ,
உன் உதிரம்தந்து என் உணர்வுகளுக்கு
உயிர் தருகிறாய் என்பேனா ?
{kunena_discuss:779}