(Reading time: 1 minute)

என்பேனா !(?) – கலைவாணி

Pen

என் மன வயலில் முளைத்த எண்ணங்களை

எழுத்து எனும் நாற்றாக்கி

நடவுச் செய்கிறாய் என்பேனா ?

 

என் உணர்வுகளை  உயிர்ப்பெறச் செய்து

காகிதத்தை கதையாய், கவிதையாய்

உருமாற்றுகிறாய் என்பேனா ?

 

என் ஏற்புகளையும் மறுப்புகளையும்

உன்(ண்)மை கொண்டு

உறுதிப்படுத்துகிறாய் என்பேனா ?

 

என் தனிமை ரணங்களை

உன் கூர்முள்ளால் கிழித்து

குணப்படுத்துகிறாய் என்பேனா ?

 

உச்சமாய் ,

உன் உதிரம்தந்து என் உணர்வுகளுக்கு

உயிர் தருகிறாய் என்பேனா ?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.