கவிதை - ஆசை - இந்திரா
பௌர்ணமி ஒளியில்
கடற்கரையில்
கவி எழுத ஆசை...
மெல்லிய சாரலில்
சிறு நடனமிட ஆசை...
இளங்காலை பொழுதில்
தென்றல் என் சிகை
கலைக்க ஆசை...
அம்மா மடியில்
உறங்க ஆசை...
அதிகாலை சூரியன்
என்னவருடன்
கைகோர்த்து தோள் சாய்ந்து ரசிக்க ஆசை...
இன்னும் எத்தனையோ
சின்ன ஆசைகள்...
எழுதிட பக்கங்கள்
போதாது!!!