கவிதை - அவனால் முடியும்! - ரவை
நாளொன்றில் நூறாக
நரபலி வாங்கும் கொரோனா
வாளெடுத்து தலைசீவி
மாய்த்திட முடியும்கொல்?
கோளெங்கும் கோலோச்சும்
கொரோனா காரணத்தை
ஆளுக்கொன்றாக அறிஞர்
அனுதினமும் கூறுகிறார்!
மருந்தில்லை; மருத்துவர்
விழிக்கின்றார், புரியாமல்!
வருந்துவோர் எண்ணிக்கை
விறுவிறென கூடுது, பார்!
செறுக்குடனே மார்தட்டி
தரணிவலம் வந்தவரே!
இறுதியிலே அறிந்தீரா?
இறைவனால்தான் முடியும்!