(Reading time: 10 - 19 minutes)

சிறுகதை - வாழ்க்கை லட்சியம்! - ரவை

த்தாம் வகுப்பு! அந்த ஆண்டின் இறுதி நாள்! வழக்கம் போல, ஆசிரியர் மாணவர்களை கேட்டார்:

" நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்? இஞ்சினீயரா? டாக்டரா? விஞானியா? தொழிலதிபரா? அரசு அதிகாரியா?"

மாணவர்களில் பெரும் பாலோர் 'இஞ்சினீயர்', பத்து பேர் 'அரசு அதிகாரி', மற்றவர் 'டாக்டர்'!

 ஒரே ஒரு மாணவர் இன்னும் சொல்லவில்லை!

  " குருநாதன்! நீ சொல்!"

" நான் ஒரு 'பத்தாம் வகுப்பு ஆசிரியர்' ஆகவேண்டும்....."

  வகுப்பே 'கொல்' என சிரித்தது!

  ஆசிரியர் வரதனுக்கு, இந்த பதிலில் ஏதோ பொருள் இருப்பதாகத் தோன்றியது!

  " வரதன்! நீ ஏன் 'ஆசிரியர்' ஆக, அதுவும், 'பத்தாம் வகுப்பு ஆசிரியர்' ஆக விரும்புகிறாய்?"

 " பாரம்பரியமாக, இந்த வகுப்பின் கடைசி நாளில், மாணவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்கிற ஆசிரியர் யாவரும், மாணவர் களிடம், 'இஞ்சினீயரா, அரசு அதிகாரியா, டாக்டரா' என்று கேட்கிறீர்களே தவிர, ஒருவரும், ' ஆசிரியரா?' என கேட்பதில்லை?

  அதை கேட்பதற்காகத் தான், நான் 'பத்தாம் வகுப்பு ஆசிரியர்' என்று சொன்னேன்"

ஆசிரியர் வரதனுக்கு தன்னை யாரோ, சவுக்கால் அடிப்பது போல் இருந்தது!

உயரே விட்டத்தை பார்த்தார், இதயம் வலித்தது, கண்களில் நீர் கோர்த்தது!

 " குருநாதன்! பெயருக்கு ஏற்ப, உன் பதில் சிறப்பானது! என் பணியை நானே மதிக்கா விட்டால், வேறு யார் மதிப்பர்?"

" மன்னிக்கணும், சார்! அது இந்தப் பணியின் நெடு நாளைய சாபக்கேடு! இவர்கள் ஏனோ தங்களை தாழ்வாகவே நினைத்துக் கொள்கிறார்கள்!"

" குருநாதன்! நீ இன்னும் ஏதேதோ சொல்ல நினைக்கிறாய், இங்கே வந்து பேசு!"

" எங்க தாத்தா, எங்க அப்பாவிடம் அடிக்கடி சொல்வார்,  'எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்கள் துறையை நினைத்து பெருமைப்படாமல் இருப்பது, இந்த நாட்டில் ஒரு சாபக்கேடு!

 டாக்டராக இருப்பவர் தன் வாரிசு, தன் துறைக்கு வருவதை விரும்புவதில்லை. அதுபோல, இஞ்சினீயர், அரசு அதிகாரி, விஞானி!

  ஏன் தெரியுமா? அவர்கள் எதிர்பார்க்கிற மதிப்பு, மரியாதை பிறர் தருவதில்லை என குறைப் படுகிறார்கள். எவன் ஒருவன் மரியாதையை பிறர் தரணும் என எதிர்பார்க்கிறானோ, அந்த மரியாதை நிரந்தரமல்ல! தருபவன் எந்த நேரமும் தருவதை நிறுத்திக் கொள்வான்.

  ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் பணியையும் நேசிக்கவேண்டும் மதிக்கவேண்டும்

10 comments

  • Super Uncle... Kadavul correct time la tharuvanga... Unmai than... Sila visayathai varathan pola yosichu seivathu nalathu than.. nice one..
  • அன்புள்ள Dhanu! இதயத்தை மகிழ்வில் நினைக்கிறது தங்கள் பாராட்டு! நன்றி!
  • குட் மார்னிங், டியர் அதர்வா! எனக்கு முன்பே நீங்கள் அனைவரும் படித்துவிட்டு பாராட்டியுள்ளது, மகிழ்ச்சி தருகிறது! இன்றைய நாள் இனிய நாள்! மிக்க நன்றி!
  • ஆழமான கருத்தை உள்ளடக்கிய அழகான கதை உணர்ந்து படித்தேன். மிக அருமை. தங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் ஐயா☺️👌
  • Rendume nalla concept uncle :hatsoff: 👏👏👏👏👏 rombha practical ah express seithu irukinga 👍 we can't fall for others desire..... We will get only what we deserve...<br />Likewise guru oda grandpa sonnadhum very much justifiable 👌<br /><br />Thank you and have a great evening.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.