கொண்டிருந்தவர், கையில் தூங்கி கொண்டிருந்த என் மகளை மடியில் வைத்தபடி நான் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்து விட்டு,
“என்ன பவி?” எனக் கேட்டார்.
வழக்கம் போல் அவரை சீண்ட,
“வேற என்ன உங்களை பற்றி தான் யோசிச்சிட்டு இருந்தேன்... எல்லோரும் கல்யாணத்திற்கு பிறகு தான் பொண்டாட்டி கூட பேசாமல் இருப்பார்கள், சண்டை போடுவார்கள் ஆனால் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் மனைவியாக வர போறவளுடன் பேசாமல் சண்டை போடும் ஆள் உலகத்தில் யாராவது உண்டா? கோர்ட்ஷிப் டைமில் கூட ஒழுங்கா பேச தெரியலை....”
“ஹேய், இன்னும் எவ்வளவு நாள் இதையே சொல்வ? நான் தான் சாரி சொல்லிட்டேன்ல?”
“சாரி சொன்னால் போதுமா? நான் எப்போதும் சொல்லிட்டே தான் இருப்பேன்...”
“உன்னை....”
“போதும் போதும், கவனமா வண்டியை ஓட்டுங்க....”
வண்ணம் என்பதே மற்ற வண்ணங்கள் கலப்பதால் உருவாவது தான், இதில் என்ன பிடித்த வண்ணம் பிடிக்காத வண்ணம்? ரசனைகள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்... அதை மற்றவரிடம் திணிக்காமல், அவரின் மனதை உணர்ந்து நடப்பது தான் சரி... சின்ன சின்ன விஷயங்களுக்காக எத்தனை பெரிய விஷயங்களை இழக்க இருந்தேன்? எனக்கு பிடித்த பாடல் அவருக்கு பிடிக்கா விட்டால் தான் என்ன குறைந்து போய் விட்டது???
உங்கள் எழுத்துகளில் ஏதோ ஒரு தனித்தும் இருக்கிறது என நினைக்கிறேன். படிப்பவர்கள் மனதை இலகுவாக்குகிறது.வாழ்த்துகள் பிந்து வினோத்
Very nice story