“பிருந்தா, கோபமா?”
“...”
“உனக்கு கோபம்னு தெரியுது, நான் சொல்வதை கொஞ்சம் கேளேன்... உன் கையில் இருக்கும் இந்த தழும்பு எப்படி வந்ததுன்னு நினைவிருக்கா?”
அவன் பிடியில் இன்னமும் இருந்த வலது கையை பார்த்தவள் பழைய ஞாபகத்தில்,
“அது... அது...” என்று தடுமாறினாள்.
அவளின் தடுமாற்றத்தை ரசித்தவன்,
“தெரியும், நான் உன்னை பார்க்க வந்த அன்னைக்கு கல்யாணம் வேண்டாம்னு உங்க அம்மாவிடம் நீ அடம் பிடிச்ச போது கையில் இருந்த கண்ணாடி வளையல் உடைஞ்சு வந்த தழும்பு...”
உனக்கு எப்படி தெரியும் என்பது போல் அவள் பார்க்க,
“தெரியும், உன்னை ரகசியமா பார்க்க வந்தேன்... வெள்ளிக் கிழமை நீ கோவிலுக்கு வருவேன்னு சொன்னாங்க... வந்தா நீ அங்கே உங்க அம்மாவிடம் மேலே படிக்கனும்னு சொல்லி அடம் பிடிச்சிட்டு இருந்த...”
“அது அது...உங்களை பிடிக்காமல் எல்லாம் இல்லை...”
“நீ சொல்லி தானா கண்ணா அது எனக்கு தெரியனும்... விஷயத்திற்கு வரேன் பொறுமையா கேள்... உன்னை பார்த்த உடனேயே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு... உனக்கு மேலே படிக்கக் ஆசை, உடனே கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லைன்னு புரிந்தது... ஆனால் எனக்கு காத்திருக்க பொறுமை இல்லை... அது மட்டுமில்லாமல் எனக்கு ராஜஸ்தானில் ட்ரெயினிங்