(Reading time: 38 - 75 minutes)

வனின் முத்தத்தில் திளைத்தவள், அவனை தள்ளிவிட்டாள்... அவன் அவள் கையை இறுக பற்றிக்கொண்டு, ஹ்ம்ம்.. ஸ்வரா... எப்போ இருந்து உனக்குள்ள இந்த மாற்றம்??... என் மேல எப்போ காதல் வந்துச்சு?... சொல்லுடா பொண்டாட்டி ப்ளீஸ்... என்று கெஞ்சி கேட்க...

ஹ்ம்ம்.. ஒரு நாள் என் கொலுசு நல்லா இருக்குன்னு சொன்னீங்கல்ல, அப்போ இருந்து தான் நானும் பைத்தியமாக ஆரம்பிச்சிருக்கேன் உங்க மேல... அப்புறம் என்னங்கன்னு கூப்பிட்டது கூட உங்க மேல இருக்குற காதலினால் தான் போலும்... ஹ்ம்ம்... அத்தை போன் பண்ணி பேசியதும் கொஞ்சம் கஷ்டமா இருந்தது... ஆனா, ரூமிற்குள் வந்து போட்டோவில் இருந்த உங்க முகத்தை பார்த்ததும், உங்களை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணும்னு தோணுச்சு... அதான் செல்லப் பேரு வச்சு, சொல்லிப்பாத்துக்கிட்டேன்... அதான் அன்னைக்கு மதியம் பார்த்து பார்த்து சமைத்து உங்களுக்குப் பரிமாறினேன்... நீங்க என்னடான்னா, வாடகைக்கு ஒரு பொண்ணை கொண்டு வரவான்னு கேட்குறீங்க... அது எனக்குப் பிடிக்கலை... அதான் ஒருவாரம் பேசாம மௌன விரதம் இருந்தேன்... ஆனா நீங்க ஏன் பேசாம இருக்கன்னு ஒரு வார்த்தை கூட கேட்கலை... அப்புறம், நீங்க சொல்வீங்கல்ல, பொண்டாட்டின்னு... அது எனக்கு ரொம்ப பிடிக்கும்... அந்த பேரையும் சொல்லலை அந்த வாரம்... சரியான அழுத்தம் உங்களுக்கு... நீங்களும் அதுக்குப்பிறகு எங்கிட்ட சரியாவே பேசலை ஹ்ம்ம்... என்று அவனிடம் முறைத்துக்கொண்டவள், பின், மேற்கொண்டு சொல்லலானாள்...

அப்போ தான் ஒருநாள் அந்த பொண்ணு வீட்டுக்கு வந்தா... நீங்க என்னை யாரு வந்திருக்கான்னு பார்க்க சொன்னீங்க... நான் நீங்க எங்கிட்ட பேசிட்டீங்கன்னு சந்தோஷமா போய் கதவை திறந்தேன் தெரியுமா... ஆனா அந்த பொண்ணு சுதன்-னு உங்க பேர் சொல்லி கூப்பிட்டதும் எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு... ஆனா, நீங்க நான் அங்கே இருக்கேன்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாம அவகிட்ட பேசிட்டு போறீங்க... எங்கிட்ட பேச முடியலை, அவகிட்ட மட்டும் பேசுறீங்கன்னு உங்களை அர்ச்சனை பண்ணிக்கிட்டே இருந்தேன்னா, அப்போதான் கவனிக்காம காலில் பாலை ஊத்திக்கிட்டேன்... அப்புறம் நீங்க என்னை விழுந்து விழுந்து கவனிச்சது, மருந்து போட்டு விட்டதுன்னு எல்லாம் சேர்ந்து உங்க மேல காதலை கொண்டு வந்திருக்கு... அந்த பொண்ணு வந்தப்ப அவ மேல ஏன் கோபப்பட்டேன்னு இப்போதான் எனக்கு புரியுது... உங்க மேல இருக்குற காதலினால் தான்... இல்ல அன்ஷுமா.... என்று அவள் கேட்க... அவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்...

சிறிது நேரத்திற்கு பின், ஹ்ம்ம் மேலே சொல்லு... என்று அவன் ஊக்கப்படுத்த, அன்னைக்கு ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தப்பிறகு என் காலை நீங்க பிடிக்கப் போகும்போதும் நான் தடுத்தேன் நினைவிருக்கா... அப்போ நீங்க நீ என் பொண்டாட்டிடா ன்னு ஒருவார்த்தை சொன்னீங்க பல நாள் கழிச்சு, அதான் என்னையும் மறந்து நான் காலை நீட்டிட்டேன்... அப்புறம் ஒருநாள், காயம் ஆறின பிறகு, என் காலை நானே பார்த்துட்டிருந்தேன் நீங்க மருந்து போட்டதெல்லாம் நினைவுக்குக்கொண்டு வந்து... நீங்க வந்தது என் காலை எடுத்து உங்க மடியில வச்சது எல்லாமே கனவுன்னு தான் நினைத்தேன்... நீங்க வலிக்குதாடான்னு கேட்டதற்கு பின்பு தான் அது நனவென்று உணர்ந்தேன்... அப்பவும் உங்க மேல கொள்ளை காதல் இருந்துருக்கு... அதான், இன்னொரு காலை கூட புண்ணாக்கிப்பேன்னு சொல்லியிருக்கேன்..

அதுக்குப் பிறகு, உங்களுக்கு ஒரு நல்ல தோழியா இருக்கணும்னு முடிவெடுத்து தான் ஓரளவு உங்க்கிட்ட பேசி பழகினேன்... அப்போதான் ஒரு நாள், உங்களுக்கு காய்ச்சல் வந்த்து... நான் எப்படி துடிச்சேன் தெரியுமா... என் உயிரே எங்கிட்ட இல்லை தெரியுமா உங்க முணகல் மட்டும் கேட்டப்போ... என்றவள் அந்த நாளின் நினைவில் கண்ணீர் சிந்தியவாறு அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்...

ஹே... ஸ்வரா... என்னடி இது எதுக்கெடுத்தாலும் அழற?... விடுடா... நீ என் செல்ல பொண்டாட்டி தானே.. அழாதடி... அழாம சொல்லணும் என் மேல உனக்கு காதல் கதையை... சரியா ??...

ஹ்ம்ம்... என்றவள், கண்களைத்துடைத்துக்கொண்டு, அடுத்து நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள்...

என் பர்த்டே அப்போ நீங்க கொடுத்த கொலுசு, அதை உங்களை போட்டு விட சொன்னது எதையும் நானே கூட எதிர்பார்க்கலை... நான் அப்படி போட்டு விட சொல்லுவேன்னு... அப்ப தான் நீங்க பிடிச்சிருக்கான்னு கேட்டீங்க.. நானும் பிடிச்சிருக்கு அன்ஷுமா –ன்னு தான் சொல்ல வந்தேன்... ஹ்ம்ம்.. அப்பறம் நீங்க..... என்றவள் வெட்கத்துடன் நிலம் பார்க்க,

ஹ்ம்ம்... நான்... சொல்லு... சொல்லு...

ப்ச்... அதான் உங்களுக்கே தெரியுதுல்லை... அப்பறம் என்னவாம்....

ஹ்ம்ம்... நான் உன்னை கிஸ் பண்ணேன்... அதுதானே... என்று அவன் சிரிக்க...

சேட்டைப்பையன் நீங்க... ஹ்ம்ம்... என்று சலித்துக்கொண்டவள், உண்மையை சொல்லணும்னா, நீங்க கொடுத்த அந்த இரண்டாவது பரிசில் தான் நான் என்னையே உணர்ந்தேன்... என்றவள், உங்களுக்கு ஒன்னு தெரியுமா இன்னைக்கு காலையில், நான்.... என்றவள் வார்த்தை வராது தவிக்க,

ஹ்ம்ம்... நான் கொடுத்த முத்தத்தை திருப்பி கொடுக்க வந்த... அதுதானே மை டியர் ஸ்வீட் பொண்டாட்டி?... என்று கண்ணடித்துக்கேட்க...

இது இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்????... என்று அவள் விழி விரிக்க...

ஹ்ம்ம்ம்.. ரொம்ப பசிக்குது... வீட்டுக்கு போன பிறகு மீதியை சொல்லவாடா ஸ்வரா...?...

ஹ்ம்ம்... சரிங்க... பட் கண்டிப்பா சொல்லணும்....

கண்டிப்பா சொல்லுறேன்... என்றவன் மனைவியின் மனதில் இடம்பிடித்த சந்தோஷத்துடன் வீட்டிற்கு சென்றான்...

என்னப்பா... இவ்வளவு நேரம்... என்னாச்சு சுதா... என்றபடி அவர் மகனை கேட்க... அவனோ இல்லம்மா... கொஞ்ச நேரம் ஆயிட்டு... கோவிலில் சிறப்பு பூஜை எல்லாம் முடிச்சிட்டு வர லேட் ஆயிட்டும்மா.. அப்படித்தானே ஸ்வரா... என்றபடி மனைவியைப் பார்க்க, அவளோ வெட்கத்துடன் உள்ளே சென்றுவிட்டாள்...

இரண்டு பேரும் இப்படியே எப்பவும் சந்தோஷமா நிறைவா வாழணும்... என்று மகனை வாழ்த்தியவர், நானும் சந்தோஷப்படணும்பா சீக்கிரம் பாட்டியாகி... என்றார் மகனிடம்...

உங்க ஆசை நிறைவேறும் மா.. போதுமா... என்றவன் தாயைக் கட்டிக்கொண்டான்...

மதியமே அவன் அன்னை ஊருக்கு கிளம்பி சென்றுவிட, சுதனும் ஓய்வெடுக்க அவன் அறைக்கு சென்றுவிட்டான்... அவன் மாடிக்கு செல்வதைப் பார்த்த பின்னரே, அவள் சமையலைறைக்குள் நுழைந்தாள்...

சில பாத்திரங்களே இருந்தபடியால், அதை தானே கழுவிக்கொள்வேன் என்று சுதனின் அம்மாவிடம் சொல்லி அவர்களை வேலைப் பார்க்க விடாமல் பார்த்துக்கொண்டாள் அல்லவா... அந்த வேலையை இப்போது அவள் தொடர்ந்த போது, இரு கரம் அவளை இடையோடு சுற்றி அணைத்துக்கொண்டது...

திடுக்கிட்டு துள்ளியவளை, விழாமல் பற்றிக்கொண்டான் தன்னோடு சேர்த்து...

விடுங்க... கூச்சமா இருக்கு... ப்ளீஸ்... என்று அவள் சொல்வதையும் பொருட்படுத்தாமல், அவளைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தான்...

மெல்ல அவளை சோபாவில் கிடத்தியவன், அவளருகே அமர்ந்து அவளின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.... அவன் செயலில் முகம் மலர்ந்தவள், என் அன்ஷுமா என்று அவனின் தலை கோதிவிட்டாள்...

பார்த்தியா... இப்போகூட காலையில் குடுக்காமல் போனதை திருப்பிக்கொடுக்கமாட்டிக்குற... ஏண்டி... இப்படி பண்ணுற... உன்னை... என்றவன், சட்டென எழுந்து முத்தமிட்டான் அவள் முகமெங்கும்...

ஹ்ம்ம்... அன்ஷு... என்றவள் சிணுங்கியபடி, அவனை விட்டு விலக முயற்சித்தாள்... அவன் அவளைப் பிடித்து இழுத்து மீண்டும் அவள் மடியில் படுத்துக்கொண்டான்...

என்னடி அன்ஷு?... நீதான் தரமாட்டிக்கிற?... தர்ற என்னையும் தள்ளி விடுற?... போடி.. பேசாதே... என்றவன் முகம் திருப்பிக்கொள்ள,

என் செல்லம்ல... ப்ளீஸ்.. பேசுங்க... சண்டை எல்லாம் வேண்டாமே... என்று சிறுபிள்ளையாய் கொஞ்ச, அவன் முகம் மலர்ந்து சிரித்தான்...

ஹ்ம்ம்... குட் பாய்... இப்போ சொல்லுங்க பார்ப்போம்... என்று அவள் எடுத்துக்கொடுக்க, அவன் அனைத்தையும் சொல்லி முடித்தான்...

அந்த திவ்யாவை வீட்டுக்கு வர வழைத்தது தான் தான் எனவும், விளையாட்டாக ஒரு பெண் பேச்சுத்துணைக்கு ஏற்பாடு பண்ணவா என்று கேட்டதற்கே ஒரு வாரம் பேசாமல் இருந்தாய் அல்லவா அப்போது தான் புரிந்து கொண்டேன்... முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டுமென்று... அவளுடன் நான் சிரித்துப் பேசியதற்கு எனக்கு அர்ச்சனை செய்தாயே... அதையும் நான் கேட்டேன் சமையலறை வாசலில் நின்றவாறு... ஆனால், நான் அங்கேயே மேலும் நின்றிருந்தால் உன் காலில் அப்படி காயம் ஏற்பட்டிருக்க விட்டிருக்கமாட்டேன் ஸ்வரா... ரொம்ப வலிச்சதாடா?... என்றவன் கனிவாக கேட்க, அவள் உருகிவிட்டாள்...

இப்படிதாண்டி அடிக்கடி ஃப்ரீஸ் ஆகிடுற... அது என் மேல இருக்குற காதலில் தானோன்னு சில சமயம் தோணினாலும், உங்கிட்ட நெருங்க பயமா இருக்கும்... நான் நெருங்கி நீ மறுபடியும் அந்த மௌனத்திரைக்குள் புகுந்துகிட்டா என்ன செய்ய முடியும்?... அதான் அமைதியா இருந்தேன் நான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.