(Reading time: 8 - 16 minutes)

 

ந்த மருத்துவமனை வாசலில் சென்று நின்றது கார். அவளை ஒரு அறையில் காத்திருக்க செய்துவிட்டு உள்ளே சென்றான் அவன். சில நிமிடங்களில் வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் சகிதம் தனது அறையில் இருந்து வெளிப்பட்டான். கெளதம் ஒரு மருத்துவன்.!!!

அவள் அருகில் வந்து 'எல்லாம் சரியா நடக்கும். தைரியமா இரு...' அவள் கையை பிடித்துக்கொண்டு நம்பிக்கையூட்டும் புன்னகையுடன் சொன்னான் கெளதம்.

சில நிமிடங்களில் மயங்கிய நிலையில் அந்த ஆபரேஷன் தியேட்டரில் இருந்தாள் சௌம்யா. ஒரு தீர்கமான சுவாசத்துக்கு பிறகு ஒரு மருத்துவனாக கத்தியை கையில் எடுத்தான் கெளதம். அவர்களது உறவினர்கள் பதற்றத்தின் எல்லையில் நின்றவர்களாக வெளியில் காத்திருந்தனர். சில மணி நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்திருந்தது. எல்லாரிடமும் நிம்மதியான சுவாசம்.

சில மணி நேரங்கள் கழித்து கண் திறந்தாள் சௌம்யா. அவள் எதிரில் பளீர் சிரிப்புடன் கெளதம்.

'ஹாய் டார்லிங்... எப்படி இருக்கே?' உற்சாக குரலில்  கேட்டான் அவன்.

அவன் குரல் அவள் செவிகளில் தேனாக பாய்ந்தது. சந்தோஷமாக சிரித்தாள் சௌம்யா.

'நல்லா இருக்கேன் கெளதம்.' அந்த நிமிடத்தில் அவளது இரண்டாம் காதல் முதல் காதலை ஜெயித்து பின்னால் தள்ளி விட்டதை போன்றதொரு உணர்வு அவளுக்கு.

நான்கு ஐந்து நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்திருந்தாள் அவள். அறை கதவை சாத்திவிட்டு அவனை மாறி மாறி முத்தமிட்டு தன்னோடு இறுக்கிக்கொண்டாள் சௌம்யா.

சில மணி நேரங்களுக்கு பிறகு எங்கோ வெளியில் சென்று விட்டு திரும்பினான் கெளதம்.

'இந்தா எல்லாம் உனக்குத்தான்' கையில் இருந்த சி.டி. க்களை அவள் மடியில் கொட்டினான் கெளதம். நல்லா சந்தோஷமா கேளு எல்லா பாட்டையும். ஆனா கொஞ்ச நாளைக்கு சத்தம் கம்மியா வெச்சு கேளு, ஹெட்போன் மாட்டாதே சரியா?' அவன் சொல்ல அவள் சந்தோஷ சிரிப்புடன் தலை ஆட்ட பழைய சௌம்யாவை பார்த்த சந்தோஷத்தில் அவளை இழுத்து முத்தமிட்டு விட்டு அங்கிருந்து அகன்றான் கெளதம்.

'இதோ அவளுடைய முதல் காதலை மறுபடியும் அவளிடம் சேர்த்திருந்தது அவளுடைய இரண்டாவது காதல்!!!!!!.'

அவளுடைய முதல் காதல் இசை. சிறு வயதில் இருந்தே இசை பயின்று பாடுவதும், இசைக்கருவிகள் வாசிப்பதும், முக்கியமாக நிறைய பாடல்கள் கேட்பதுமே அவளுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.. அவளது, மகிழ்ச்சி, வருத்தம், மன அழுத்தம் அத்தனைக்கும் எப்போதும் இசை துணையாகவே இருந்திருக்கிறது.

அந்த விபத்தில் அவள் தனது கேட்கும் சக்தியை இழந்திருந்தாள். இசை இல்லாமல், அவளது முதல் காதல் இல்லாமல் வாழ்கையே அஸ்தமித்து விட்டது போலேவே ஒரு உணர்வு இருந்தது அவளுக்கு. இதோ!!! இதோ!!! அவளது முதல் காதலை மறுபடியும் அவள் கையில் சேர்த்திருக்கிறான் கெளதம்.

மகிழ்ச்சியின் எல்லையை தொட்டவளாக அந்த அறையில் இருந்த சி.டி ப்ளேயரில் மிதமான ஒலியில் அந்த பாடலை ஒலிக்க விட்டாள்.

'குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா... குறை ஒன்றும் இல்லை கண்ணா... ' எம். எஸ் சுப்புலக்ஷ்மியின் குரலில் அந்த பாடல் அவள் செவிகளில் தேனாக பாய அப்படியே கண் மூடிக்கொண்டாள் சௌம்யா.!!!!

திடீர்னு ஒரு ஐடியா ஸ்ட்ரைக் ஆச்சு. படபடன்னு type பண்ணிட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க ஃபிரண்ட்ஸ். thanks a lot.

This is entry #08 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.