(Reading time: 24 - 47 minutes)

டுத்தும் இவள் எதுவும் பேசவில்லைதான்…..ஆனால் வீட்டிற்கு வந்து இரவு படுக்கப் போகும் முன் இவளிடம் பேச வந்தான் அவன்.

“சாரி தனு…. என்ட்ட கேட்காம அக்கா நமக்கு முசோரிக்கு ஒரு ட்ரிப் புக் செய்துறுக்கா…… உனக்கு ஓகேன்னா போய்ட்டு வருவோம்….இல்ல கண்டிப்பா முடியாதுன்னா சொல்லு….அவட்ட எப்டியாவது நான் சொல்லிக்கிறேன்….” என்றபடி  இவள் முகத்தைப் பார்த்தான்.

இவள் அடுத்து எதுவும் சொல்லும்  முன்….. “இது அக்காவுக்காக போய்ட்டு வர்ற ஜஸ்ட் அ ட்ரிப்”… என விளக்கம் வேறு கொடுத்தான்.

இப்ப விருந்துக்கு போறதா போடுற வேஷத்த கொஞ்சம் மாத்தி ட்ரிப் போறதா போடப் போறோம்…..மத்தபடி ஒரே வீட்ல இருக்றதுன்னா இங்க இருந்தா என்ன இல்ல முசோரில போய் இருந்தா என்ன….. அதுரா அண்ணிக்காக செய்யலாம்…. என அதற்குள்  யோசித்து முடித்திருந்த தன்ஷி சம்மதமாய் தலையாட்டினாள்….

இத்தனை நாள் பழக்கத்தில் அதுராவை இவளுக்கு பிடித்திருந்தது.

டுத்த மூன்றாம் நாள் டேராடூன் வரை ஃப்ளைட்டில் சென்று அங்கிருந்து காரில் இவர்கள் முசோரியை சென்றடையும் போது இரவாகி இருந்தது…. ஸ்னோ ஃபால் வேறு…..

குளிர் மற்றும் அந்த பயண களைப்பில்  மறு நாள் காலை படுக்கையைவிட்டு எழும்பவே தன்ஷிக்கு மனம் வரவில்லை….

அதனால் காலை அவன் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பியபோது “நான் வரல” என்ற இரண்டே வார்த்தையில் மறுத்துவிட்டாள்.

அதில் சட்டென அவனும் வெளியே செல்லும் ப்ளானை ட்ராப் பண்ணுவான் என இவள் எதிர்பார்க்கவில்லை….

வெளியே செல்ல முழுதாய் கிளம்பி நின்றவன் ஜெர்க்கினை கழற்ற ஆரம்பிக்க…..இவளுக்கு முகம் விழுந்து போனது……‘ஏன் ? இவள தனியாவிட்டுட்டு போனா என்னவாம்? ‘ அம்மா அப்பா நியாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை இவளால்.

“தனு டூரிஸ்ட் ப்ளேஸ்ல ஹோட்டல்ல லேடீஸ் தனியா இருக்றது எனக்கு சேஃபா தோணாதுமா….” என இவள் மனம் உணர்ந்தார் போல் பதில் சொன்ன அவன்…..”அதுராக்காகனாலும் இதத்தான் செய்வேன்…” என்றுவிட்டுப் போனான்.

இப்பொழுதுதான் முதல் முறையாக இவளுக்கு உறுத்த ஆரம்பித்தது….. இவன் இவள பத்தி தெரிஞ்சு பேசுறானா…? இல்ல யதார்த்தமா சொல்றானா??

அடுத்து நேற்று அவன் படுத்திருந்த ஹால்  சோஃபாவில் போய் அவன் தஞ்சமடைய……இவள் மனக் குதிரை எங்கெல்லாமோ சுற்றி வந்து களைத்துப் போனது….

இருந்த ஒரே படுக்கை அறையில் வெகு நேரம்   விழுந்து கிடந்தவளுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை….

எழுந்து வெந்நீரில் குளித்து உடை மாற்ற கொஞ்சம் பெட்டர் ஃபீல்…. கடிகாரம் மணி மூன்று என்றது….

“ஒரு வாக் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் போல இருக்கு….”  அவனிடம் போய் சொன்னாள்….

“ஷ்யூர்” என்றபடி ஜெர்கினை அணிந்து கொண்டு கிளம்பிய அவன், அருகிலிருந்த டேபிளில் இருந்த அவனது பர்ஸை எடுத்து…. கையில் காயம் பட்டிருந்த காரணத்தால் அந்த கையால் அதை தன் பாக்கெட்டில் வைக்க திணற….

“என்ட்ட குடுங்க…. நான் கொண்டு வரேன் “ என அதை வாங்கிக் கொண்டாள் இவள். அடுத்து ஞாபகமாக ரூம் சாவியை தானே எடுத்து அறையை பூட்டிவிட்டு கிளம்பினாள். இந்த கையோட அதைப் பூட்ட அவனுக்கு கஷ்டமா இருக்குமே….

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என வாக்கிங் நீண்டு கொண்டே போய் சற்று அதிக தூரமே போய்விட்டனர் போலும்…..இருந்த குளிருக்கு அங்கு கண்ணில் பட்ட ஒரு குட்டி ஹோட்டலில் நுழைந்து சாய் ஆர்டர் செய்தனர்….

அதை குடித்து முடித்து பில்லுக்காக பார்க்கும் போதுதான் கவனித்தாள்….. அவன் பர்ஸ் இவளிடம் இல்லை…. ரூமிலிருந்து கிளம்பும் நேரம் கீயால் கதவை திறக்க முயன்ற போது…..அது கொஞ்சம் திறவா கிரகம் செய்ததால், முயன்று திறப்பதற்காக, கையிலிருந்த பர்ஸை அருகிலிருந்த டேபிளில் வைத்தது இப்போதுதான் நியாபகம் வருகிறது….

இவளிடமும் ஒரு பைசா கிடையாது…...இவளுக்கு கை காசு என ஒரு பைசா தந்திருக்கவில்லை இவள் பெற்றோர். கல்யாணம் முடிஞ்சு கிளம்புறப்ப இவ அப்பாட்ட வாய்விட்டு கேட்டா.

“அதான் மாப்ள இருக்கார்ல……பார்த்துப்பார்” என அம்மாவிடம் இருந்து அதற்கு பதிலாவது கிடைத்தது. அப்பாவிடமிருந்து பதிலும் வரவில்லை பணமும் வரவில்லை.

இப்ப இவ என்ன செய்யனும்??? விக்கித்துப்போனாள்.

பிடிபட்ட போந்தா கோழி மாதிரி இவ முழிக்கிற முழியிலேயே தெரிஞ்சுட்டு போல அவனுக்கு…..

“என்னாச்சு…?” என இவளிடம் கேட்டவன்….இவள் பதில் சொல்லும் முன்னும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு….”நீ டிஃபன் ஆடர் செய்து சாப்டுட்டு இரு தனு….நான் அதுக்குள்ள ரூம்க்கு போய்ட்டு வந்துடுறேன்….” என்றபடி எழுந்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.