ராத்திரியெல்லாம் தூக்கமே வராது தெரியுமா?.......
………………ஒன்றும் சொல்லாமல் கணவனின் முகபாவங்களில் லயித்து இருந்தால் சுப்ரியா.
டாக்டர் , பக்கத்து வீட்டு அக்கா , பாட்டி ஒருத்தர் விடாம விபரம் கேப்பேன். பக்கத்து வீட்டினர் அவளைப் பார்க்கும் பார்வையின் அர்த்தம் தற்போது புரிந்தவளாய் முகம் சிவந்தாள் இவள்.
அப்பவே நம்ம ரெண்டு பேர் வீட்டுக்கும் கூட போய் கூப்பிட்டிருப்பேன். யாராவது எதையும் சொல்லிட்டா அதை நீ தாங்கிக்க மாட்டியோன்னு ஒரு கவலை, கூடவே தேவை இருந்தப்ப என்கிட்ட தான வந்தீங்கன்னு சொல்லிடுவாங்களோன்னு ஒரு ஈகோ…
ம்ம்…
ஏற்கெனவே ஆஃபீஸ்ல உன் டெலிவரிக்கு ஒன் மந்த் லீவ் கேட்டிருந்தேன், அதுக்காக எக்ஸ்ட்ரா நேரம் வேலைச் செய்ய வேண்டி இருந்துச்சு. அப்பல்லாம் ரொம்ப டென்ஷன் & ரொம்ப பயமாயிருக்கும் உன்னக் கூட அப்பப்ப திட்டிருக்கேன்னு நினைக்கிறேன்………
அப்பப்பவா…அடப்பாவி தினமும்டா.அது கூட உனக்கு நினைப்பில்லையா? என மனதிற்க்குள் செல்லமாய் கணவனை திட்டியவள் தனக்கு நிகரான மன அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டு மறுகிக் கொண்டிருந்த தன்னுடைய கணவனின் மறுபக்கத்தை அறிந்தவளாய் அதைச் சுட்டிக் காட்டுவது, குத்திக் கிளறுவது வேண்டாமென்ற முடிவுக்கு வந்தவளாய் அவனுக்கு ஆறுதலாக தலையை வருடி விட்டாள். இது தான் சாக்கென்று அவன் அவள் மடியில் சாய்ந்து தன் தலையில் மனைவியின் கையை வைத்து முடியைக் கோதச் சொன்னவன் மனைவியின் சுகமான வருடலில் சற்று நேரத்தில் கண் அயர்ந்தான்.
இதுவரை ஏன் தன்னிடம் கடுமையைக் காட்டிக் கொண்டிருந்தானோ? என்று மனதை அழுத்திக் கொண்டிருந்த வருத்தங்கள் ஏற்கெனவே மாயமாக மறைந்து விட்டிருக்க தன்னுடைய மனதில் இருப்பதை பகிர்ந்துக் கொள்ளவியலாமல் இத்தனை மாதங்களாக தவித்துக் கொண்டிருந்திருக்கிறான் என்று கணவன் மேல் பரிவுத் தோன்ற மடியில் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய கணவன்தான் தன்னுடைய முதல் குழந்தையோ என எண்ணியவளாக, புன்முறுவலோடு குனிந்தவள் அவன் நெற்றியை மறைத்துக் கொண்டிருந்த சிகையை சற்று அகற்றி தன் உதடுகளை பதித்து அழுத்தமாய் முத்தமிட்டாள்.
This is entry #92 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்புச் சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்
எழுத்தாளர் - ஜான்சி
{kunena_discuss:1083}