(Reading time: 9 - 18 minutes)

ன்ன சார் என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு….. நீங்க எல்லாம் ரொம்ப பெரியவங்க…. நாங்க யாரு சார் உங்களை மன்னிக்க……

கௌதமிற்க்கு புரிந்துவிட்டது யாமினியின் கோபம். அவள் யாருமிதவாது அதிகம் கோபம்க் கொண்டாள் அவர்களுக்கு அதிகம் மரியாதைக் கொடுத்து அவர்களை விலக்கிவைப்பாள். தன் நிலையை எண்ணி தலைக் கவிழுந்தான்.

மன்னிப்பு!!!!! எவ்வளவு சுலபமான சொல்லிட்டிங்க சார். என்ன தவறு செய்தாலும் சுலபமா மன்னிப்பு கேட்டுடலாம். அதுவும் அவள் ஒரு பெண் தானே. அவ கழுத்துல தாலி ஏறியிடுச்சுனா அவளும் வேறவழியில்லாமல் உன்னை கணவனாக ஏற்றுக்கொள்வாள் என்று நினைச்சீங்க இல்ல…. அவள் மனதில் ஏற்கனவே ஒருவனை தன் கணவனாக நினைத்து வாழுந்துகொண்டுஇருக்கிறாள், அப்படி இருக்கும் பொழுது உங்ககூட வாழமுடியுமா? ஒருவேளை உமா இந்த அவமானம் தாங்காமல் தன்னை மாய்த்துக்கொண்டாள் என்றால் என்ன செய்வீங்க?

ஒரு நிமிடம் பேச்சற்று போனான் கௌதம். அந்த மாதிரி நினைக்கவே அவனுக்கு உடம்பு எல்லாம் பதறியது.

சொல்லுங்க கௌதம்…..

காதல் என்பது யாரையும் கட்டாயப்படுத்தி வரக்கூடாது. காதலுக்கும் நட்புக்கும் அவசியம் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்டீங்க கௌதம்….. நட்பு என்ற போர்வையில் நீங்க செய்த இந்த முட்டாள்தனத்தை என்னால மன்னிக்கவே முடியாது.

இனிமே "என் முஞ்சியிலேயே முழிக்காதீங்க..." என்றால் அவள்.

“இப்பொழுதும் பல ஆண்களுக்கு பெண் என்றால் அடக்கி ஆளும் ஒரு பொம்மை. வளரும்பொழுதே தாய் தன்னுடைய பெண்ணுக்கு ஆண்களிடம் எப்படி மதிக்கவும் பழகவும் வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறாள். அதே தாய் தன் ஆண் பிள்ளைகளிடம் எப்படி பெண்களை சமமாக நடத்தவும், மதிக்கவும் வேண்டும் என்றும், அவர்களுக்கும் ஒரு மனது இருக்கிறது என்றும் அவர்களின் மனதில் பதியவைத்தால் இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பல பிரச்சைனைகளும் கொடுமைகளும் முற்றுப்பெற அதுவே முதல் படியாக அமையும்.”

This is entry #103 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - அனிதா தேவராஜ்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.