(Reading time: 7 - 13 minutes)

ம்ம்…அதுக்கப்புறம் என்ன பண்ணின? இன்னும் ராணியின் உக்கிரம் குறையவில்லை.

அவ வீட்டு போன் நம்பருக்கு கால் பண்ணினேன், யாரோ ஒருத்தங்க அவளுக்கு போன் கொடுக்க மாட்டேன்னு சொன்னாங்க , நல்ல வாய்க்கு வந்த மாதிரி திட்டிட்டு வச்சிட்டேன்.

நீ செஞ்சது எல்லாம் சரியாடா?

நான் லவ் பண்றேன் இதெல்லாம் செஞ்சா தான அவளுக்கு புரிய வைக்க முடியும்.

ஏதேது இது தான் உன் லவ்வா? இப்ப உனக்கு வயசு என்ன? லவ் பண்ணுற வயசா? நீ என்ன நினைச்சிட்டு இருக்க இதொன்னும் சினிமா இல்ல, நிஜ வாழ்க்கை இன்னும் லைப்ல என்ன எல்லாமோ இருக்கு, அதை பத்தி யோசிக்காம இந்த சின்ன வயசிலயே உனக்கு காதல் கேட்குதாடா?

நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவன்னு நினைச்சேன்.. அக்கா முனகினான்.

எதுக்கு நீ படிக்காம உருப்படாம போறதுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு நினைச்சியா? இனிமே ஒரு தடவை அந்த பொண்ணை நீ தொல்லை செஞ்சேன்னு எனக்கு தெரிய வந்துச்சு பார்த்துக்கோ சித்தப்பா, சித்தி கிட்ட சொல்லி கொடுத்துடுவேன்.

என்னோடது ட்ரூ லவ்வு அக்கா உனக்கு தெரியாது…….

ஓஹோ சாரோட லவ்வு ட்ரூ லவ்வா? உனக்கு அவளைப் பத்தி என்னத் தெரியும்? அவ மத்த பிள்ளைங்க மாதிரி இருந்தா எப்பவோ பிரின்ஸிபல் கிட்ட கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கணும். அவ ஏன் கம்ளெயிண்ட் கொடுக்கலைன்னு நீ நினைக்கிற?

ஏன்னா அவளும் என்னை லவ் பண்ணுறா அதான் என்னை காட்டி கொடுக்க அவளுக்கு மனசில்ல…

அடச்சீ…நீயும் உன் லாஜிக்கும்…மடப்பயலே, மடப்பயலே அவ வீட்டுல அவ தினந்தோறும் படிக்கிறதுக்கே போராடி , போராடி ஸ்கூல் வந்திட்டு இருக்கா..அவங்க குடும்பத்தில எல்லாம் பதிமூணு , பதினாலு வயசிலயே கல்யாணம் செஞ்சு கொடுத்திடுவாங்களாம். அவங்க அப்பா அவளை படிக்க வைக்கவே விருப்பபடலை, இப்ப கூட அவளை சீக்கிரமா கட்டிக் கொடுத்திரணும்னு சொல்லிகிட்டு இருக்காராம்.

அவங்க அம்மா தான் சண்டைப் போட்டு அவளை படிக்க வைச்சு கிட்டு இருக்காங்க, இதில நீ செய்யிற கூத்து பார்த்து அந்த அம்மாவும் மகளும் இன்னிக்கு பதறினதை நீ பார்த்திருக்கணும். உன்னோட போன் காலையும், க்ரீடிங்க் கார்டையும் பார்க்கிறவங்க நீ அவளை காதலிக்கிறதா மட்டுமா நினைப்பாங்க, அவளுக்கும் உனக்கும் காதல்னு ரெண்டு பேரையுமே தான் பொதுவில வச்சு பேசுவாங்க. இந்த அழகில போன் பேசின அவங்க அம்மாவ வேற நீ திட்டிருக்க…….

……………….

அப்புறம் என்ன நினைச்சிருக்க நீ, உன் காதல் கத்தரிக்காய் தான் பெரிசுன்னு இன்னிக்கு செஞ்ச மாதிரியே செஞ்சு படிக்க ஆசைப் படுற பிள்ள வாழ்க்கையை வீணாக்க போறியா? இல்லை ……

நான் இனிமே இப்படி செய்ய மாட்டேன் அக்கா…..சொன்னவன் கண்களில் கண்ணீர் நிறைந்து நிற்க, நான் வேணா அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ நான் சொன்னதை மட்டும் செய்யு புரியுதா……..

சரிக்கா நான் என்னோட முட்டாள்தனத்தை உணர்ந்துட்டேன். இனி அவளை தொந்தரவு செய்யவும் மாட்டேன். நானும் படிப்பில கவனம் செலுத்துவேன்கா..

…ம்ம் நீ தான் என் நல்ல தம்பியாச்சே….உண்மை உணர்ந்து கண்ணீர் வழிய உட்கார்ந்துக் கொண்டிருந்தவனை தாய்மையோடு அணைத்துக் கொண்டாள் ராணி.

This is entry #120 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி/கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - ஜான்சி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.