அவளது கையில் இருந்து செல்போனை சஞ்சய் வாங்கியது நினைவுக்கு வந்தது. வந்த வழியே திரும்ப ஓடினாள். வழியில் சஞ்சய் வைத்திருந்த தொப்பி கிடைத்தது. திரும்ப அந்த மனநலக் காப்பகத்தின் அருகே சென்றாள். அதே குடிசைகள் அதே மனிதர்கள். அதே வயதான பெண்மணி. அங்கு ஒரு கொலை நடந்த அறிகுறியோ பதட்டமோ இல்லாதது ப்ரீத்திக்கு பயமூட்டியது. ப்ரீத்தி அந்த குடிசைக் கடக்கும் போது , கொஞ்சம் ஊசி போடறதுக்கு இவரைப் பிடிச்சிக்க முடியுமா? என்று கேட்டாள் அந்த பெண்மணி. ப்ரீத்தி தன்னால் முடியாது என்று தலை அசைக்க , அப்பெண்மணியின் கைகளில் இருந்த ஊசி கத்தியைப் போல் அவள் கண்களுக்கு தெரிந்தது. பயந்தவாறே அந்த அலுவலக அறையின் அருகில் சென்றாள். கீழே தனது செல்போன் கிடக்கிறதா என்று பார்த்துக் கொண்டே நடந்தாள். ஜன்னலின் அருகில் சென்று எட்டிப் பார்க்கும் பொழுது,
ஒரு கை நீண்டது ரத்தக்கறையுடன்,ப்ரீத்தி பயந்து பின்னால் நகர,
"என்ன மேடம் செல்போனைத் தானே தேடுறீங்க, இந்தாங்க உங்க செல்போன் "
ரத்தக்கறையுடன் கத்திக் குத்துபட்ட மனிதன் எழுந்து அந்த செல்போனை நீட்ட..
அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள் ப்ரீத்தி.
கையில் செல்போனை நீட்டியது கொலையான மனிதனின் ஆவி தான் என்று பயந்து, அவள் மூர்ச்சை அடைந்தாள்.
முகத்தில் நீர்த்துளிகள் சிலீரென்று பட்டதும் ப்ரீத்திக்கு கொஞ்சம் தெளிவு வந்தது, அவள் அருகில் "ப்ரீத்தி, ப்ரீத்தி "என்று தன்னை எழுப்பும் குரல் சஞ்சயின் குரல்.
அவள் விழிக்கும் போது, அவளைச் சுற்றி ரத்தக்கறையுடன் அந்த கொலை செய்யப்பட்ட மனிதன், அவனது கொலையாளிகள், அந்த மனநோயாளிகள், அப்புறம் அந்த வயதான பெண்மணி.
என்ன நடக்குது இங்க? நீங்கல்லாம் யாரு?சஞ்சய் எங்க? அவர் குரல் கேட்டதே?திருதிருவென விழித்தாள் ப்ரீத்தி!
நாங்க எல்லாரும் உங்க வீட்டுக்காரர் வேலை பார்க்கும் டிவி சேனலில், சீரியல் சூட்டிங் வந்த குழு. இங்கே நீங்க பார்த்த கொலை எங்க சீரியலின் ஒரு காட்சி.எதுவும் நிஜமில்லை. பயப்படாதீங்க! சொன்னது அந்த வயதான பெண்மணி தான். அந்தக் குழுவினர் பிறந்தநாள் பாடலைப் பாடத் தொடங்கினார்கள்.சஞ்சய் அந்த அறைக்குள் நுழைந்தான். அவன் கையில் கேக் முகத்தில் புன்னகை, சிரித்தவாறே ப்ரீத்தியைப் பார்த்துக் கேட்டான் சஞ்சய் .. "மறக்க முடியாத நினைவுகளும் ஆச்சரியங்களும் தான் சிறந்த பரிசுன்னு அடிக்கடி சொல்லுவியே.. இது மறக்க முடியாத திரில்லிங்கான பிறந்தநாள் தானே போதுமா ப்ரீத்தி செல்லம் இந்த பிறந்தநாள் பரிசு!"
{kunena_discuss:785}