என்ன கார்த்திக் ஏன் ஏதேதோ பேசுற??என்னனு சொல்லு..
சஹி நீ என்கிட்ட எந்த விஷயத்தையாவது மறைச்சுருக்கியா டா??
சத்தியமா இல்ல மாமா..
ஆனா நா மறைச்சுருக்கேனே சஹிம்மா..
மாமா..
நிஜமாடா ஒரே ஒரு விஷயம் ஆனா அது உன்னை பத்தின விஷயம்..அதை மறைச்சுட்டு உன்மேல முழு உரிமை எடுத்துக்க என்னால முடியாது..அத இப்போ உன்கிட்ட சொல்லனுமாநு கூட தெரில ஆனா நீ என் மேல வச்சுருக்க பாசத்தை பாக்கும்போது மறைக்குறது தப்புநு மட்டும் தோணுது..அமைதியாய் அவனே மேலும் பேசட்டும் என காத்திருந்தாள்..
சஹி நீ அன்னைக்கு ட்ரெய்ன் பாத்து மயங்கி விழுந்தது..அப்பப்போ டயர்டா ஆகுறமாறி பீல் பண்ணது காயத்ரி இந்த வீட்டுக்கு வந்தது எல்லாமே உன்னோட பாஸ்ட் லைப்னால தான்..
என்ன சொல்ற மாமா எனக்கு ஒண்ணும் புரில..
சஹி நா சொல்றத முழுசா கேளு அதுக்குள்ள எந்த ஒரு முடிவுக்கும் வராத..அதுமட்டுமில்லாம என்னை துளியளவு கூட தப்பா நினைச்சுராதடா சத்தியமா அதை என்னால தாங்கிக்க முடியாது..உன் நல்லதுக்காக நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கனும்ங்கிறதுக்காக தான் இத சொல்லல இன்னைக்கு இதெல்லாம் நடக்காம இருந்திருந்தா இன்னைக்கும் சொல்லிருக்க மாட்டேன்..இன்னும் இருபது நாள்குள்ள எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிட்டு உன்கிட்ட வந்து நின்றுப்பேன்..இப்போ எல்லாமே தலைகீழா மாறிடுச்சு..என அவளின் மாற்றத்தை தேவிகா அவளுள் வந்த முதல் நாள் தொடங்கி அனைத்தையும் கூறி முடித்தான்..
ஒன்றும்கூறாமல் சஹானா அவைனையே பார்த்திருக்க சாரி சஹிம்மா மறைச்சது தப்புதான்..ஆனா உனக்கு எதாவது ஆய்டுமோநு பயந்துட்டேன்டீ..நீயில்லாம எனக்கு லைப் இல்ல சஹிம்மா..என கண்கலங்க அவனை இறுக கட்டிக் கொண்டாள்…அத்தனை நாட்கள் தன்னுள் புதைத்திருந்த பாரத்தை கண்ணீராய் தன்னவளிடம் கொட்டித் தீர்த்துவிட்டான்..அவன் சற்று நிதானமடைந்ததாய்தோன்றியபோது விடுவித்தாள்..
மாமா நீ ஏன் மாமா அழற..நீ ஒரு தப்பும் பண்ணல..நீ சொன்னதெல்லாம் கேக்கும்போது எனக்கு எவ்ளோ சந்தோஷமாயிருக்கு தெரியுமா..ஏழு ஜென்ம பந்தம்நு சொல்லுவாங்களே அது எனக்கு நடந்துருக்கு..இதே உன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா இவ்ளோ பண்ணிருப்பாங்களாநு தெரில உங்க பொண்ணுக்கு ஏதோ ப்ரச்சனையிருக்குநு சொல்லிட்டு போய்ருப்பாங்க..எனக்காக பாத்து பாத்து பண்ணிருக்கியே மாமா அதை என்கிட்டயும் காட்டிக்காம..சத்தியமா ஐ அம் வெரி வெரி லக்கி மாமா..நீ மட்டுமில்லாம சிவா ஷரவ் ஷரவன் கௌரி மணி அண்ணாணு எனக்காக எத்தனை பேரு இருக்காங்கநு நினைக்குறப்போ இதெல்லாமே உன்னால தான் மாமா..லவ் யூ லவ் யூ லவ் யூ மேட்லி கார்த்திக்..
சஹிம்மா என இறுக கட்டிக் கொண்டான்..நீ ஒண்ணும் கவலபடாதடா இந்த ப்ரச்சனைய எப்படி முடிக்கனுமோ அப்படி முடிக்குறேன்..இங்கயிருந்து சென்னை போறப்போ நா என் சஹியை சஹியாவே கூட்டிட்டு போவேன்..ப்ராமிஸ்டா என அவள் கைமேல் வைத்திருந்த அவன் கைகளையெடுத்து தன் இடுப்பைச்சுற்றி படரவிட அதை விலக்க எத்தனித்தவனை விடாமல் பிடித்தாள்..அவன் ஏதோ கூற வாயெடுக்க தன் விரல்களால் அவன் வாயை மூடியவள்..நீ ஒண்ணும் பேச வேணாம் நீ இந்த உண்மையெல்லாம் சொல்லாம இருந்திருந்தாலுமே நா உனக்கு குடுக்க நினைச்ச சர்ப்ரைஸ கண்டிப்பா குடுத்துருப்பேன்..உனக்கு பேச குடுத்த டைம் முடிஞ்சுடுச்சு இனி எதுவாயிருந்தாலும் காலைல பேசிக்கலாம்.. என்றவள் அதற்குமேல் தானும் பேசவில்லை அவனையும் பேசவிடவில்லை..
ஹலோ மக்களே..சஹானாக்கு விஷயம் தெரிஞ்சது எதிர்பாக்காததா இருந்திருக்கும்நு நினைக்குறேன்..படிச்சு முடிச்சு மறக்காம கமெண்ட் தட்டி விட்டு போங்க பாக்கலாம்..
தொடரும்
{kunena_discuss:1097}