(Reading time: 17 - 34 minutes)

21. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

என் தூக்கம் வேண்டும் என்றாய் 

தரமாட்டேன் என்றேனே 

கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய் 

வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே 

உள்ளத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய் 

அன்றாடம் போகும் பாதையாவும் 

இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் 

நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்றேன் 

கால்நோக கால்நோக நின்றேன்

 

நான் போகிறேன் மேலே மேலே 

பூலோகமே காலின் கீழே 

வின் மீன்களின் கூட்டம் என் மேலே 

பூவாலியின் நீரைப்போலே 

நீ சிந்தினாய் எந்தன் மேலே 

நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே 

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் 

அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் 

ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் 

ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும் 

நான்னான நன்னா நன்னான

திகாலை 5 மணிக்கெல்லாம் கார்த்திக் விழித்துவிட்டான்..சொல்லப் போனால் இரவு அவன் தூங்கச் சென்றதே 3 மாணிக்கு மேல்தான் இருக்கும்..காதலர்களாய் கணவன் மனைவியாய் மனதாற எத்தனை ஆண்டு வாழ்ந்தாலும் தாம்பத்யம் என்ற ஒன்று வெறும் உடல் சம்மந்தபட்டதாக இல்லாமல் இருமனங்கள் ஒரு பாதையில் சங்கமிக்கும் நிகழ்வாய் இருந்தால் மட்டுமே அந்த காதல் உண்மையான அடுத்த நிலைக்குச் செல்லும்..கார்த்திக் அதை உணர்ந்திருந்தான்..அழகிய மலராய் தன்னருகில் உறங்குபவளிடமிருந்து அவனால் கண்களை அகற்றமுடியவில்லை..எத்தனை பெரிய விஷயத்தை கூறினான்..அதைப்பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்ன ரியாக்ட் செய்ய போகிறாள் என அவன் பயந்திருக்க அவள் அதை ஒரு பொருட்டாக கொண்டதாகவே தெரியவில்லை..இது என்ன மாதிரியான அன்பு நம்பிக்கைஒன்றும் புரியவில்லை..ஏதோ சிந்தனையில் அவள் முகம் வருட இன்னுமாய் அவன்புறம் சாய்ந்துபடுத்தவளை எழுப்பிவிடுவோமோ என்றெண்ணி மெதுவாய் எழுந்து வெளியே வந்தான்..மெழுவர்த்திகள் அனைத்தும் கரைந்திருக்க மணி யாரும் வந்தால் என்ன செய்வதென்றெண்ணி அவற்றை அகற்றி சுத்தம் செய்தான்...அதையடுத்து குளித்து தயாரானவன் சமையலறைக்குச் சென்று தனக்கான காபியை எடுத்துக் கொண்டு உணவு மேஜையில் அமர இரவுப் பொழுதின் நினைவில் இதழ் விரிந்தது..அப்படி இப்படியாய் ஓரளவு அனைத்தையும் சுத்தம் செய்து முடிக்க சஹானா இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்..நேரம் ஏழைத் தொட்டிருக்க அவளுக்காக காபியை எடுத்துக் கொண்டு அறைநோக்கிச் சென்றான்..

போர்வையை இழுத்துமூடி கால்களை குறுக்கி படுத்திருந்தவளைப் பார்க்க மனம் அதுவாய் அவள்புறம் சாய்ந்தது..மெதுவாய் அவள் தலையருகில் அமர்ந்தவன் கன்னம்தட்டி எழுப்ப அறைகுறையாய் விழித்தவள் தாய்பறவையோடு குஞ்சுகள் ஒட்டிக் கொள்வதைப்போல் ஒட்டிக் கொண்டாள்..

சஹிம்மா எழுந்துருடா டைம் ஆச்சு பாரு..நைட்டே நீ ஒழுங்கா சாப்டல வா எதாவாது சாப்ட்டு தூங்கு..

வேணாம் மாமா நா அப்பறமா சாப்டுறேன் ரொம்ப தூக்கம் வருது கொஞ்ச நேரம் தூங்குறேன் ப்ளீஸ்..

சஹி சமத்துல எழுந்து இந்த காபியாவது சாப்ட்டு தூங்கு.எழுந்திருடா..

அய்யே ப்ரஷ் பண்ணாம காபியா என்ன மாமா நீ என மெதுவாய் எழுந்து அவன் தோள் சாய்ந்து கொள்ள..

ம்ம் நீ ரொம்ப க்ளீன்தான் ஒத்துக்குறேன் பட் இன்னைக்கு ஒருநாள் பரவால்ல சாப்டு என டம்ளரை அவள் கையில் திணிக்க மறுக்காமல் வாங்கி பருக ஆரம்பித்தாள்..பருகும்போதே அவ்வப்போது கார்த்திக்கை ஓரப்பார்வை பார்க்க அவள் காதோர முடிக்கற்றையை சரிசெய்தவாறு ஏன்டீ அப்படி பாக்குற???

இல்ல கொஞ்சம் மேக்கப்போட இருக்குறப்போ ரொமன்ஸ் பண்றது ஓ.கே இப்படி தூக்க கலக்கத்துல கலைஞ்ச தலையா இருக்கும்போதும் வச்ச கண்ணு வாங்காம பாகுறீயே அதான்..

ம்ம் இதுக்கே இப்படி சொன்னா எப்படி ப்யூசர்ல உன் தலைமுடி நரைச்சு கன்னம் சுருங்கி பல்லெல்லாம் விழுந்து பொக்கையானாலும் நா இப்படிதான் ரொமான்ஸ் பண்ணுவேன்..உனக்கு வேற ஆப்ஷனே இல்ல பேபி…

சஹி ..

ம்ம் சொல்லு மாமா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.