நேத்து நா சொன்ன விஷயத்தைப் பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையேடா??
எதபத்தி சொல்ற மாமா??
என்ன சஹி இப்படி கேக்குற??
மாமா நீ ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க அந்தளவு நா இந்த விஷயத்தை பெருசா எடுத்துக்கல..ட்ரெயின் இன்ஸிடெண்ட்க்கு அப்பறம் நிஜமாவே ஏதோ இருக்கோநு பயந்தேன்..அதாவாது தீர்க்க முடீயாத ஹெல்த் ப்ராப்ளம் இல்ல வேற எதாவதுநு..பட் நேத்து நீ சொன்னதை கேட்டப்போ பெரிய நிம்மதியே வந்துருச்சு..இதை நீ மறைச்சதுலயும் தப்பு இல்ல மாமா..இப்போ என் மனசுல இருக்குறது ஒரே நினைப்புதான் போன ஜென்மத்துல உன்னோட வாழ முடியாம போன வாழ்க்கையையும் சேர்த்து ரசிச்சு ரசிச்சு இப்போ வாழனும்..இதுக்குமேல இதபத்தி யோசிக்க ஒண்ணுமேயில்ல..இனி நீ என்ன ப்ளான் பண்றியோ எனக்குதெரிஞ்சே பண்ணு என்னால முடிஞ்ச ஹெல்ப நானும் பண்ணுவேன்..வேற எதையும் போட்டு குழப்பிகாத மாமா..
அவளையே பார்த்திருந்தவனின் முன் விரல் அசைத்து அழைக்க செல்லமாய் அவள் தலையை வருடியவன் நீ எப்பவுமே புரீயாத புதிர் தான் டீ பொண்டாட்டி..சரி போ ரெடி ஆய்ட்டு வா நா மணி அண்ணா டிபன் பண்ணிருந்தா வாங்கிட்டு வரேன் என்றவாறு வாசல் கதவை திறந்து பார்க்க மணி வீட்டின் கதவு பூட்டியிருந்தது..வாசலில் இரண்டு ஹாட்பேக்கில் ஏதோ இருக்க அதை எடுத்து உள்ளே வந்தவன் கதவை மறுபடியும் பூட்டிவிட்டு வந்தான்..
சஹானா தயாராகி வந்துடேபிளில் இருந்த பாத்திரத்தை கவனித்துவிட்டு ஓ அண்ணா கிளம்பிட்டாரா நைட்டே சொன்னாரு மாமா தோட்டத்துல ஏதோ வேலை இருக்குநு நாதான் மறந்துட்டேன் சரி நா உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன் நாம டிபன் சாப்பிடலாம் என்றவாறு சமையலைறைக்குச் செல்ல ஒன்றுமே கூறாமல் மெதுவாய் அவள்பின் சென்றான்.. அடுப்பின் முன் நின்று அவள் ஏதோ செய்து கொண்டிருக்க முடிகளில் இருந்து வழியும் நீர் அவள் முதுகை வருட தலைமுடியை உதறிக் கொண்டாள்..மெதுவாய் அவள் பின்னிருந்து அவன் அணைக்க உடல் சிலிர்த்து திரும்பினாள்..முகத்தோடு முகம் உரச தன்னவனின் ஸ்பரிசதால் கண்மூடி நின்றவளின் முடிகற்றைகளை கைகளால் ஒதுக்கியவன் அவள் காதோடு மூக்கு உரச பெண்ணவளோ இன்ப அவஸ்தையில் நெளிந்தாள்..
மாமா..
ம்ம்ம்
இன்னமும் அவன் முகம் நகர்த்தாமல் இருக்க மெதுவாய் அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள் நீ போ நா எடுத்துட்டு வரேன் என அரைகுறை குரலில் கூற..
இன்னைக்கு நீ ரொம்ப அழகா தெரியுற டீ பொண்டாட்டி உன்கூடவே இருக்கேனே ப்ளீஸ்..
மாமா என்ன இது குழந்தைமாதிரி..
என்ன எதனால உனக்கு இவ்ளோ பிடிச்சுருக்கு சஹிம்மா??
என்ன கேள்வி இது??
பரவால்ல நீ சொல்லு…
ஏன்னா என் வாழ்க்கையோட சந்தோஷமே நீதான்..சந்தோஷத்தை யாருக்காவது பிடிக்காம போகுமா??
அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி இன்னுமாய் தன்னோடு சேர்த்தவன் நெற்றியில் அழுத்தமாய் தன் இதழ் பதித்தான்.. இப்போ போலவே என் ஆயுள் முழுசும் உன்மேல பைத்தியமாவே வச்சுரு சஹி..அது உன்னால மட்டும்தான் முடியும்..
கர்வமான பார்வை பெண்ணவளிடம்..ஆனாலும் என்ன எப்படி மடக்கனும்நு உனக்குதான் தெரியும் கார்த்திக்..டூ ஸ்மார்ட் யூ ஆர் என இதழ் சுழிக்க,கார்த்திக் ஏதோ கூற வாயெடுக்க அவன் கைப்பேசி அழைத்தது..ஒருவித கனவு தடைப்பட்டதாய் உணர்ந்தவன் தன்னவளை ஒருபுறம் பிடித்தவாறே போனை பார்க்க சிவா தான் அழைத்திருந்தான்..சஹானா சிரித்தவாறே அவனைவிட்டு விலக அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..
ஹாய் சிவா..
கார்த்திக் எப்பவும் கால் பண்ண உடனே எடுத்துடுவீங்க சாரி வெளில எங்கேயும் இருக்கீங்களா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா??
ச்சச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல சொல்லுங்க..
ம்ம் உங்க குரல்லயே தெரியுது கரெக்ட்டா தப்பான டைம்ல கால் பண்ணிட்டேன்னு..நா சொல்ல வேண்டியத சொல்லிட்றேன்..அந்த அருண் கேஸ் டீடெய்ல்ஸ்லா உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன் பாத்துட்டு கால் பண்ணுங்க பை..என பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்துவிட்டான்..
சிறு வெட்கத்தோடு கைப்பேசியை நெற்றியில் தேய்த்தவன் சஹானாவை பார்க்க நடந்ததை யூகித்தவளாய் குறுஞ்சிரிப்போடு ஹாலுக்குச் சென்றாள்..
இருவருமாய் தங்களுக்கு பரிமாறியபடியே காலை உணவை முடிக்க பாத்திரங்களை சுத்தம் செய்வதில் உதவுவதாய் கூறி சஹானாவை சீண்டிக் கொண்டேயிருந்தான்..
மாமா சிவா தான் உனக்கு ஏதோ வேலை குடுத்தானே அதப்போய் பாக்கலாம்ல..இங்க என் வேலையையும் சேர்த்து கெடுத்துட்டு இருக்க..போ ஒழுங்கா போய் ஹால்ல உக்காரு நா வரேன் என மிரட்ட அவனும் பயந்த குழந்தையாய் நடித்து அவளுக்கு அழகுகாட்டிச் சென்றான்..