(Reading time: 17 - 34 minutes)

அங்கு கார்த்திக் சேரில் அமர்ந்து மேஜையில் சாய்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான்..அவன் நெற்றிமுடி ஒதுக்கி மென்மையாய் இதழ்பதித்தவள் குட் மார்னிங் மாமா..

குட் மார்னிங்டா சஹி..எப்போ தூங்கினேன்னே தெரில இங்கேயே தூங்கிட்டேன் போல..

பரவால்ல மாமா நீ காபி சாப்ட்டு போய் ரூம்ல படு முதுகு வலிக்க போகுது..

இதுக்குமேல தூங்குறதா சரிதான் எவ்ளோ வேலையிருக்கு..என காபியை பருக,

மாமா என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்க,சொல்லலாம்னா சொல்லு இல்ல வேணாம்..

என் பொண்டாட்டிட்ட சொல்லாமயா..அந்த பொண்ணை இங்க லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ளைண்ட் பண்ண சொல்லிருக்கேன்..எப்படியும் அவன் ஜாமீன் வாங்கிருவான்..அந்த களேபரம் முடியரதுக்குள்ள வள்ளியும் அவ பாட்டியும் இந்த ஊரை தாண்டிருப்பாங்க..சென்னை போக சொல்லிருக்கேன்..அங்க சிவா ப்ரெண்ட் ஒருத்தர் வீட்ல ஒரு போஷன்ல ஸ்டே பண்ண சொல்லிருக்கேன்..அல்டிமேட்டா வள்ளிக்கு பின்னாடி நாம இருக்கோம்நு அந்த அருண்க்கு தெரிய கூடாது..

சிவா இந்த கேஸை எடுத்தா டவுட் வரும்தானே மாமா..

கரெக்ட் அதனால தான் சிவா இதுல நேரடியா தலையிட போறதில்ல..பொதுநல வக்கீல் ஒருத்தர்ட்ட பேச சொல்லிருக்கேன் அவருக்கும் அந்த அருண்க்கும் எந்த கான்டாக்டும் கிடையாது சோ கண்டிப்பா நாம மேல டவுட் வராதுடா..

ம்ம் ப்ளான் நல்லாதான் இருக்கு ஆனா கொஞ்சம் பயமாயிருக்கு கார்த்திக்..

அவளை பார்த்து மென்னகைத்தவன் அவளை தன் மடியில் அமர வைத்தான்..சஹி பேபி நேத்து நீதான சொன்ன தேவிகா எல்லாத்தையும் பாத்துப்பாநு அப்பறம் நீயே பயந்தா எப்படி..கவலயே படாத இந்த தடவை தண்டனை நிச்சயம் அந்த அருணுக்குத்தான்..தேவிகா சந்தோஷப்படுற மாதிரிதான் எல்லாம் நடக்கும் என்ற நேரம் அங்கு அருண் தன் ஆட்களை பிரித்தெடுத்துக் கொண்டிருந்தான்..

எவ்ளோ தைரியமிருந்தா என் மேலயே கம்ப்ளைண்ட் குடுத்துருப்பா..போனா போதுனு உயிரோட விட்டா என்னையே சீண்டி விட்டாளே..அவ எங்கயிருந்தாலும் சரி அவளுக்கு முடிவு கட்டப்போறது நானாதான் இருக்கும்..என கர்ஜித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் இரு தடியன்கள் உள்ளே வர,என்னடா கிடச்சாளா??

இல்லீங்க ஐயா காலைல அவளும் ஆந்த கிழவியும் எங்கேயோ போனதா அக்கம்பக்கத்துல சொன்னாங்க..ஆனா யாருக்குமே ஒழுங்கா எந்தா விவரமும் தெரில என முழுங்கி முழுங்கி கூறி முடித்தான்..

கழுத எனக்கே ஆட்டம் காட்றாளா??எங்க போய்றாநு பாக்குறேன்..கேஸ் கோர்ட்க்கு வர்றதுக்குள்ள அவள கண்டுபிடிச்ச இல்லாம ஆக்கிட்றேன்..என வெறிப் பிடித்தவானாய் கத்திக் கொண்டிருந்தான்...

ப்ரெண்ட்ஸ் எபி எப்படியிருந்தது..அடுத்தது Penultimate epi மக்களே..காத்திருங்கள்..

தொடரும்

Ninnai saranadainthen - 20

Ninnai saranadainthen - 22

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.