(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 11 - மித்ரா

Iru thuruvangal

ரண்டு வாரங்கள் கடந்த நிலையில், அனந்திதா மற்றும் அவர்களது குழுவினர் ப்ரீத்தி மேத்தா வின் பிரான்ஞ்சிற்க்கு செல்ல வேண்டியிருந்தது. அதையறிந்த ப்ரீத்தி தன் வேலையை காட்ட தொடங்கி இருந்தாள்.

அவள் அங்கிருந்த அந்த இரண்டு வாரங்களிலும் அங்குள்ள எல்லா பகுதியையும் நன்கு சுற்றி வந்துவிட்டாள். அவளின் குணத்திற்கு ஏற்ப முதலில் அவள் கண்ணில் பட்டது எல்லாம் கெட்ட விஷயங்களும் அதை சார்ந்த இடங்களுமே ஆகும்.

போதை மருந்துகளும் மது மாது போன்ற அனைத்து தப்பான விஷயங்களும் நடக்கும் ஒரு இடமும் இருந்தது. அங்கு அடி தடி கொலை கொள்ளை போன்ற காரியம் செய்பவர்களும் இருந்தனர் என்பதை அறிந்திருந்தாள்.

அனந்திதாவின் வாழ்வை கெடுக்க ஒரு பயங்கரமான முடிவை எடுத்தாள். அது என்னவென்றால் வரும் குழுவினருடன் அவர்கள் ஒரு நாள் முழுவதும் சுற்றி பார்க்க போவதாக அவர்கள் குழுவினர் முடிவெடுத்திருந்தனர்.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி அனந்திதாவை கடத்தி அங்குள்ள SOHO – WALKUP AREA (PROSTITUTION PLACE) அங்கு அவளை விட்டுவிட்டாள் போதும். அவள் எந்த காரணம் கொண்டும் வெளியே வர முடியாது என்ற எண்ணத்தில் அனந்திதாவை கடத்த தயாராகினாள்.

ப்ரீத்திக்கு அவள் நினைப்பதை நடத்திக் காட்டும் எண்ணம் இருந்தது. அதை செயல்படுத்த ஆயத்தமானாள். அதனால், ஒரு நாள் முன்பே அவள் எல்லா ஏற்பாடும் செய்து வைத்து காத்திருந்தாள்.

அவள் ஹரிஷின் மீது வைத்திருப்பது காதலா என்று கேட்டால் கூட அவளால் பதில் கூற முடியாது. தனக்கானது தன்னை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது. அதற்காக அவள் அனந்திதாவை பற்றி யோசிக்கமால் இந்த முட்டாள் தனத்தை செய்ய முயன்றால் அதன் விளைவு மிகவும் மோசமாக அமைந்தது அவளுக்கே.

“ கெடுவான் கேடு நினைப்பான்,

 அழிக்க நினைத்து பெற முயன்ற

 வாழ்வை அவளே அழித்துக் கொண்டாள்.

 அவளின் அகங்காரதால்,

 மற்றவருக்கு தர முயன்ற

 பெயரை அவளே பெற்றுவிட

 காலமோ அவளை சுழற்றி

 அடித்தது அந்த பெயரும்

 பெற விடாமல் !! ”.......

ப்ரீத்தி நினைப்பது போல நடக்க அனைத்தும் தயாராக இருந்தது. விதி அவளின் வாழ்க்கையை அலங்கோலம் ஆக்கிவிட நேரம் பார்த்தது.

ஹரிஷ் தனது குழுவினருடன் வந்து இறங்கினான். அவன் பார்வை அனந்திதாவின் மீது பட்டு கொண்டே இருந்தது.

அதனை பார்த்த ப்ரீத்தி, “இன்னும் கொஞ்ச நேரம்தான் ஹரிஷ் அவள பார்க்க போற... நல்லா பார்த்துக்கோ.. எல்லாமே முடியபோகுது. அனந்திதாதானு ஒருத்தி இருந்ததற்கு ஆன அடையாளமே இல்லாமா போகபோகுது...” என்று மனதில் நினைத்துக்கொண்டு ஒரு வெற்றி சிரிப்பை அவர்கள் மீது வீசிக் கொண்டிருந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் பார்வையை இருவர் கவனித்தனர். அதில் ஒருவர் பிரதீப் ஒபராய்.. ஆம், அவனும் அங்கு நடைபெற்று கொண்டிருந்த மீட்டிங்கிற்கு வருகை தந்திருந்தான். மற்றொருவர் மித்திலா. அவள் அனந்திதாவை பார்த்த பார்வையில் தெரிந்த வேறுபாடை உணர்ந்தவள். அவளை கண்காணிக்க ஆரம்பித்தாள்.

பிரதீப்போ அன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகும் ப்ரீத்தியுடன் நட்புடன் இருக்கவே விரும்பினான். ஆனால், ப்ரீத்தியோ அவனை பார்த்தாலே முகத்தை திருப்பிக்கொண்டு செல்லவும் அவளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

ஆனால், அவள் பார்வை அனந்திதா மற்றும் ஹரிஷை அடிக்கடி சென்று வரவும் அவளின் மேல் சந்தேகம் கொண்டான். ஏதோ ஒன்றை இவள் செய்ய போகிறாள். அதனை தடுத்த நிறுத்தவேண்டும் என்று நினைத்தான்.      

அதன்படியே நடந்தது அடுத்த அரை மணி நேரத்தில், அனந்திதா கடத்தபட்டு விட்டாள். ஹரிஷ்தான் முதலில் அதனை கண்டறிந்தான். அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவன் திடிரென்று அவளை பார்க்கவும் அவளை ஒருவன் வாயை அழுத்திக் கொண்டு அவளை அடக்கி அங்குள்ள வண்டியில் ஏற்றினான். அதனைப் பார்த்த ஹரிஷ், “அனந்திதா !!” என்று அழைத்துக் கொண்டே அந்த வண்டியின் புறம் ஓடினான்.

என்ன என்று கேட்டுக் கொண்டே அவனருகே வந்தவர்களிடம் அவன் விவரம் கூறவும் அவர்கள் போலிசிற்கு தகவல் கொடுத்தனர். பிரதீப்பிற்கு ப்ரீத்தியின் அமைதி பயத்தை கொடுத்தது. ஏனெனில் போலீஸ் என்று கூறியபோது கூட அவள் அசையாமல் பயபடாமல் இருப்பதை உணர்ந்தவன். அவள் ஏதோ பெரிய தப்பை செய்ய போகிறாள் என்பதை உணர்ந்தவன். அவளின் கையைப் பற்றிக்கொண்டு இழுத்து சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.