(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 15 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

ஹேய் ஆர் யூ வாமிட்டிங். என்றபடி அவளின் பின்னால் நின்றான். அவனின் குரலிலேயே அது தீரன் என்பது உணர்ந்தவளுக்கு கோபம் பயம் மற்றும் பலகலவையான உணர்வுகளுக்கு ஆளானது அவள் உடல், அத்தனையும் தாளாமல் உடல் சோர்வின் காரணமாக மேனியெல்லாம் நடுங்க ஆரம்பித்து வார்த்தைகள் வெளிவராமல் இதழ் நடுநடுங்கியது.

நத்திங் பேபி டோன்ட் வொரி. டுடே ஒன்லி யூ ஹவ் ஆன்சைட்டிங். இட் வில் பைன் பார் டுமாரோ என்றபடி அவளை தாங்கி பிடிக்க முயன்றான்.

அந்த நிலையிலும் அவனின் கரத்தில் தன் மேனி படுவதை தவிர்த்து விலகி  சுவற்றை பிடித்தபடி ஒரு எட்டு தள்ளி சென்று  நின்றாள்.

அவள் தன்னை விட்டு விலகுவதை உணர்ந்தும் அதை தான் உணர்ந்ததுபோல் காட்டிக் கொள்ளாமல் அவளை ஒரே எட்டில் நெருங்கி தன்னுடன் சேர்ந்து அனைத்து பிடித்ததுபோல் வைத்துக்கொண்டு கட்டிலை நோக்கி நகர்ந்தான்.

 அவள், விடு... விடு.... என்னை என்று சொல்வதை பொருட்படுத்தாது கட்டிலில் அவளுடன் அமர்ந்தவன்   அருகில் இருந்த டீபாயின் இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து அவளிடம் இந்த லைம் ஜூஸ் குடி அப்போதான் நீ பெட்டரா பீல் பண்ணுவ என்றான்.

நா....ன் வீ....ட்டுக்கு போனும் என்னை விட்டுடுங்க என்று யாழிசை சோர்வுடன் கூறினாள்.

அவளின் சோர்வும், அவள் குரலில் இருந்த பயமும் தீரனின் மனதை சற்று ரணமாக்கியது இருந்தும் அதை அவளிடம் காட்டிகொள்ளாமல்,

இனிமேல் நான் தான். நான் மட்டும்தான் உன் பாமிலி . நான் இருக்கும் இடம் தான் உன் வீடு ஓகே. இனி உன்னால் உன் பழைய வாழ்க்கைக்குள்  போக முடியாது பேபி என்றான்.

அவனின் வார்த்தைகளை கிரகித்து புருவம் சுளித்து . என்னது நான் உன் பேமிலியா? என்னை கடத்தி வைத்திருக்கும் வில்லன் நீ! எத்தனை நாள் என்னை அடைத்து வைக்க முடியும்? என்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் அவ்வாறு கூறவும் நான் உனக்கு ஹீரோவாகனும் என்று நினைத்தேன்! ஆனால் நீ என்னை வில்லனாக பார்க்கத்தான் ஆசை படுகிறாய் போல. ஓகே, தேட்ஸ் யுவர் விஷ் என்றால். நான் வில்லனாக இப்பொழுது நடந்துகொல்லவா பேபி? என்றான் .

அவன் அவ்வாறு கூறவும் பயத்தில் அவளின் கண்கள் அகன்றது .தன்னை மேலிருந்து கீழ்வரை ரசனையாக பார்த்தபடி அவன் பேசியதில் அவள் உடல் முழுவதும் கூசியது. அவன் கூறிய தோரணை அவளிடம் தீரன் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்  என்று அர்த்தப்படுத்துவதாக யாழிசைக்கு பட்டதும்.

 பயம் மற்றும் கோபத்துடன் தீரனிடம். மேல கைய வச்ச.... ஒன்னு நான் உன்னை கொல்வேன். அது முடியாட்டி என்னை நானே கொன்னுடுவேன் என்று கூறினாள்.

அவளின் அந்த பேச்சில் மனதினுள் அடிவாங்கியவன் திமிராக அவளிடம் ஆர் யூ திங் யூ ஆர் எ கிளியோபட்ரா? என் மேல் இன்ட்ரஸ்ட் இல்லாத லேடீசை நான் போர்ஸ் செய்கின்ற பெர்சன் கிடையாது.

ஆனால் உனக்கு விருப்பம் இல்லையென்றாலும் நாம் மேரேஜ் செய்துகொள்ளத்தான் வேண்டும். உனக்கு என் மேல் இன்ட்ரெஸ்ட் இல்லாவிட்டால் நாம்  ஒரு அக்ரீமன்ட்  மேரேஜ் செய்துதான் ஆகணும்  மற்றவர்களுக்கு நாம் ஹஸ்பன்ட் அண்ட் வொய்ப் ஆனால் ரியல் ஹஸ்பெண்டாக நான் உன்னை நெருங்க மாட்டேன்.

என்னுடைய கேமில் உன் சம்மதம் இல்லாமல் உன்னை இழுத்து வந்துவிட்டேன். இப்பொழுது உனக்கு என்  மேல் இன்ட்ரஸ்ட்  இல்லை என்ற காரணத்திற்காக இந்த கேமில் இருந்து உன்னை வெளியேற்ற முடியாது.

என் பாதுகாப்பை விட்டு நீ சென்றால் உன்னை மர்டர் செய்துவிடுவார்கள்.  எனவே பாதுகாப்பான சூழலை உனக்கு ஏற்படுத்தி நான் தர சில வருடம் ஆகும். அது வரை இந்த அக்ரீமன்ட் மேரேஜிர்க்கு  நீ அக்சப்ட் செய்து கொண்டுதான்  ஆகவேண்டும் என்றான் தீரன்.

அவன் அவ்வாறு கூறியதும் யாழிசை பயத்திலும் பதட்டத்திலும் அழுகையிலும் திணறியபடி,

என்னை என்ன நினைத்துகொண்டிருகிறீர்கள் அக்ரீமெண்டாம்... கல்யாணமாம்... ஏதோ கேமாம். எப்படி தெரியுது என்னை பார்த்து உங்களுக்கு.

வேண்டாம்... இது சரியில்ல. என்னை காணோம் என்று தெரிந்ததும் வானவராயர் அய்யா இப்போ தேட ஆரம்பிச்சுருப்பார். அவர் கண்டுபிடிக்கிறதுக்குள்ள என்ன நீயாவே விட்டுவிடுவது உனக்கு நல்லது என்றாள்.

அவனுக்கிருந்த இத்தனை டெண்சங்களில் தன்னருகில் தனது மனம் கவர்ந்த யாழிசையை பார்த்தவன் அவளுடன் இன்பத்தில்  மூழ்க நினைத்தான். தன்னுடைய இத்துனை டெண்சன்களை தவிர்க்க அவன் மதுவை எடுக்க தயங்கினான். காரணம் அதனால் அவனின் யோசனையில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டுவிடுமோ  என எண்ணினான் .

அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக கையாலவேண்டியிருந்தது அவன் எதிர்த்து செயல்படுவது சாதாரண சக்திகளுடன் அல்ல. உலகத்தையே ஆட்டிபடைக்கும் இன்றைய நவநாகரீக காற்பரேட்டுகளின் போர்வைக்குள் இயங்கும் அரக்க குணமுடைய  பணம் என்ற சக்திகொண்ட பெரும் முதலைகளிடம், வெறியர்களிடம்.

அவனின் இச்சூழலில் அவளின் அணைப்பை நாடியவனுக்கு அவளின் பேச்சில் எரிச்சல் கொண்டான் தீரன். அவன் இந்த இருநாட்களாக பல வேலைகளை செய்துகொண்டும் இன்னும் பலவற்றை நடத்திமுடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டும் இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.