தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 19 - ஸ்ரீ
“ரகசிய கனவுகள் ஜல்.. ஜல்..
என் இமைகளை கழுவுது சொல்.. சொல்..
இளமையில் இளமையில் ஜில்.. ஜில்..
என் இருதயம் நழுவுது செல்.. செல்..
முதல் பிழை போல் மனதினிலே....
விழுந்தது உன துருவம்... ஓ....
உதடுகளால் உனை படிப்பேன்....
எரிந்திடு அரை நிமிடம்...
தொலைவதுபோல் தொலைவதுதான்..
உலகில் உலகில் புனிதம்...
குழு: இறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே...
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...
இறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே...
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே”
வாழ்வின் அன்றைய தினம் மறக்க முடியா நாளாக அமைந்திருந்தது ஜெயந்திற்கு.ஜீவிகாவோ எந்தவித அலட்டலும் இன்றி எப்போதும் போல் கதையளந்து கொண்டிருந்தாள்.ஜெயந்தின் தாய் மஞ்சுளாவிற்கு அழைத்து விஷயத்தைக் கூறினார்.அவரிடம் மகிழ்ச்சியைத் தெரிவித்தவர் ஜீவிகாவை அழைத்துப் பேசினார்.
“ஜீவி கண்ணா அம்மா எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா..உடம்பை நல்லா பாத்துக்கணும்.இனியும் விளையாட்டுப் பொண்ணாவே இருக்காம குழந்தையை நல்லா பாத்துக்கோ..நா நாளைக்கு சாய்ந்திரம் வந்து உன்னை பார்க்குறேன்.உனக்கு என்ன வேணும்னு சொல்லு வாங்கிட்டு வரேன்.”
“மை டியர் மஞ்சு நீ இவ்ளோ பாசமா கூட பேசுவியா..டூ பேட்..உன் பேரப்பிள்ளை வரப் போகுதுனவுடனே எப்படியெல்லாம் என்னை கொஞ்சுற..இல்லைனா என்னை திட்டிட்டே தான இருப்ப..”
“ஜீவி இப்போதான சொன்னேன்..இன்னும் நீ ஒண்ணும் சின்ன பொண்ணு