தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 10 - ஆர்த்தி N
இன்றோடு ரிஷியை சந்தித்து ஒரு வாரம் கடந்திருந்தது. அவனைப் பற்றிய எண்ணங்களை வலுக்கட்டாயமாக ஒதுக்கியிருந்தாள், ஏனெனில் எப்பொழுதும் ஓர் ஆடவனை பற்றி நினைப்பது அவளுக்கே குற்ற உணர்வாக இருப்பது போல ஓர் உணர்வு. மனதை திசைத் திருப்ப தன் அக்காவுடன் ஷாப்பிங்க் செல்வதாக முடிவெடுத்து, அவளது பெற்றோரும் ஏதோ விசேஷத்துக்கு சென்றிருக்க அவள் மட்டும் மதியம் போல ரிந்துவின் இல்லம் நோக்கி பயணித்தாள்.
“ஷப்பாஆஆஅ என்ன வெயில் க்கா.. பேசாம ஒரு ஏர் கண்டிஷன் சூட் போட்டுகலாம் போல..” என உச் கொட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்த ஷைலுவிடம்,
“கேப்’ல வர வேண்டியது தான.. உன்ன யாரு இந்த வெயில்’ல வண்டி ஓட்டிட்டு வர சொன்னது.. இரு உனக்கு குடிக்க ஏதாச்சு எடுத்துட்டு வறேன்..”
“சொல்லிட்டே இருக்காம சீக்கிரம் கொண்டு வா க்கா..” என நக்கலடிக்க.. அவளை முறைத்துவிட்டு உள் சென்றாள் ரிந்து.
“எங்க இந்த அத்தான காணோம்.. அத்தை மாமா கூட இல்லப் போல..” என கேட்டபடியே அவள் பின் சென்றாள்.
“அத்தை மாமா கும்பகோனம் போயிற்காங்கடி ஒரு ஃபங்க்ஷன்காக.. நாளைக்கு தான் வருவாங்க, உன் அத்தான் என்னைக்கு வீட்ல இருந்திற்காங்க.. அவருக்கு எப்பவும் வேலை தான் முக்கியம்.. சண்டே கூட ஏதோ பெண்டிங்க் வர்க் இருக்கு.. சீக்கிரம் வந்தறேன்னு சொன்னாரு இன்னும் ஆளை காணோம்..” என அலுத்துக் கொண்டே கூறினாலும் அவளது முகம் கணவனை நினைத்து மென்மையானது..
அக்காவின் முகத்தை சிரிப்புடன் ரசித்துக் கொண்டே அவள் தந்த ஜூசை பருகி கொண்டிருந்தாள். அக்கா கிடைக்க மாமா ரொம்ப லக்கி’ல.. அக்காவும் தான் என தன் எண்ணங்களில் மூழ்க.. ரெண்டு பேரும் என்றும் இதே சந்தோஷத்துடன் மற்றும் குறையாத காதலுடன் இருக்க வேண்டும் என மனமார அக்கணம் வேண்டிக் கொண்டாள்.
“ஏய் ஷைலு எவ்வளோ நேரம் உன்ன கூப்பிடறது.. என்ன நின்னுட்டே தூங்கிட்டியா..” என ரிந்து உலுக்கவும்..
“அக்கா என்ன லொல்லா.. கொஞ்ச நேரம் அமைதியா இருக்கலாம்னு பார்த்தா விடமாட்ட போல.. சரி நம்ம ஷாப்பிங்க் போறது உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா..”
“அதெல்லாம் இருக்கு.. மாமா இப்போ வந்திர்வாங்க.. அவரே கூட்டிட்டு போறதா சொன்னாங்க.. வா அதுவர ஹால்’ல இருப்போம்..”
இருவரும் எல்லா கதைகளையும் சூர்யா வருவதற்குள் அலசி அராய்ந்தனர். போர்டிகோவில்