அல்லாமல் வேறு காயங்களும் இருந்தது தெரிந்தது.
8.ஆனால், அதை தாண்டி கொலை என்பதற்கான சாட்சி எதுவும் இல்லாததால் நடந்தது விபத்து என்று போலீஸ் கேஸை முடித்து விட்டார்கள்.
9.இருந்தாலும் அஹல்யா இப்போதும் ஊரின் சந்தேகப் பார்வையில் இருந்து தப்பவில்லை!
பாயின்ட் பாயிண்டாக எழுதிய சக்தி, எழுதி முடித்ததும் எழுதியதை மீண்டும் படித்துப் பார்த்தாள்.
சத்யா சொன்னதுப் போல இந்த அஹல்யாவிற்கு உதவி தான் பார்க்கலாமே என்ற முடிவிற்கு வந்தாள் சக்தி.
அந்த முடிவு எடுத்தாளோ இல்லையோ, அவளின் மூளை மும்முரமாக வேலை செய்யத் தொடங்கியது.
உயிரோடு இருக்கும் போது அஹல்யாவிற்கு தொல்லை கொடுத்தது போதாது என்று, இறந்தப் பிறகும் அவளை தொல்லை செய்கிறானே இந்த சேகரன். யார் அவன்? அவனைப் பற்றி முதலில் விபரம் சேகரிக்க வேண்டும்.
ஆனால், சத்யா சொன்னதுப் போல அஹல்யா நல்லவளாக இருக்க வேண்டும் என்றும் இல்லையே.
சேகரன் உடம்பில் இருந்த அந்த காயங்களுக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? அதற்கும் அஹல்யாவிற்கும் சம்மந்தம் இருக்குமா?
கேள்விகள் மேல் கேள்விகள் தோன்றவும், மெல்ல மெல்ல விழித்துக் கொண்ட சக்தியின் போலீஸ் மூளை, இன்னும் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது.
இந்த கேஸ் விஷயமாக யாரை எல்லாம் சந்திக்க வேண்டும், என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஒரு 'மைன்ட் மேப்' போடத் தொடங்கினாள் சக்தி.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்