“ஒரு தொந்தரவும் இல்லை சக்தி. அப்பாவும், பொண்ணும் கிளம்பினப்புறம், குளிச்சிட்டு, நான் பொறுமையா சாப்பிடுவேன்... நீங்களும் தோசை சாப்பிடுறீங்களா?” என அவளிடம் கேட்டாள் சத்யா.
“இல்லை சத்யா, வேண்டாம்.”
“சும்மா பந்தா செய்யாம சாப்பிடுங்க சக்தி. தோசை வாசனை சூப்பரா இருக்குல. வாங்க உங்களுக்கும் சுட சுட சுட்டு தரேன்.”
மறுக்க முடியாமல் சத்யாவுடன் சமையலறைக்கு சென்ற சக்திக்கு, அவளுடன் பேசிக் கொண்டே, அவள் சுட்டுக் கொடுத்த தோசையை சாப்பிடுவதும் புது ரக அனுபவமாக இருந்தது.
“சத்யா, நேத்து நீங்க சொன்ன அந்த பழைய கேஸை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு தான் வந்தேன். சாரி, நேத்து நீங்க என் கிட்ட சொன்னப்போ நான் முழுக்க கவனமா கேட்கலை. ஆனால் அவுட்லைன் நினைவு இருந்துச்சு. அந்த பொண்ணுக் கிட்ட நேரா பேசலாமா?”
“அச்சச்சோ சக்தி, நாம இதைப் பத்தி பேசுறது கூட அஹல்யாக்கு தெரியாது!”
“என்ன தெரியாதா??”
“ஆமா சக்தி. நான் தான் சொன்னேனே இது பழைய மிஸ்டரி. இன்னும் இந்த ஊருல எல்லோரும் சந்தேகத்துடன் பேசிட்டு இருக்க மிஸ்டரி.”
“ஆனாலும் சம்மந்தப்பட்டவங்க சரின்னு சொல்லாம நாம இதுல இன்வால்வ் ஆகுறது தப்பு சத்யா.”
“உண்மை என்னன்னு தெரிஞ்சுக்குறதுல என்ன தப்பு சக்தி?”
“தெரிஞ்சு நாம என்ன செய்ய போறோம்?”