சக்தி சொன்னதை ஏற்றுக் கொண்டு உற்சாகத்துடன் தலை ஆட்டினாள் சத்யா!
🌼🌸❀✿🌷
மார்கெட்டுக்குள் நுழைந்த அஹல்யாவின் கண்கள் சுற்றி யாரையோ தேடியது.
“ஹலோ டீச்சர்!”
அபினவின் குரல் கேட்டப் பக்கம் கண்கள் மலர பார்த்தாள் அஹல்யா. அங்கே அபினவும் புன்சிரிப்பு மின்ன நின்றுக் கொண்டிருந்தான்.
“யாரையோ தேடினீங்க போல இருந்துச்சு?”
அஹல்யா பதில் சொல்லாமல் நிற்க, அபினவ் அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அருணிடம் பேசினான்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்க்காததுப் போல மனம் குளிர ரசித்துக் கொண்டிருந்தாள் அஹல்யா.
திடீரென கடுகடுப்பான ஒரு பெண் குரல் எந்த முன்னறிவிப்பும் இல்லாது ஒலித்தது!
“ஏன் சார் உங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல வேற வேலையே கிடையாதா? நானும் பார்க்கிறேன் எப்போவும் ஒன்னு இவங்க வீட்டுக்கு வரீங்க, விளையாடுறீங்க, இல்ல இப்படி பேசுறீங்க?”
அஹல்யாவின் எதிர் வீட்டு பெண்மணி இந்த முறை நேரடியாகவே அபினவிடம் எரிந்து விழுந்தாள்.
அஹல்யாவின் முகம் கருத்துப் போனது. அருணை இழுத்துக் கொண்டு நடந்தாள்.