(Reading time: 8 - 15 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 34 - Chillzee Story

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

க்திக்கு போர் அடித்தது. தோட்ட வேலை செய்யலாம் என்றால் அந்த 'போலி டாக்டர்' சாந்ததுரை எப்போதும் அவள் இருக்கும் இடத்திலேயே நின்றுக் கொண்டு சூப்பர்வைஸ் செய்கிறான். அதுக் கூட பரவாயில்லை!

  

அவனுடைய ஃபேன்ஸ் க்ளப் பாட்டிகளின் இம்சை அதை விட அதிகம்!

  

சக்தியைப் பார்க்கும் போதெல்லாம் சாந்ததுரையின் மனைவியா, கல்யாணம் செய்துக் கொள்ள போகும் பெண்ணா என்ற கேள்விகள். அதைக் கூட போனால் போகிறது என்று விட்டு விடலாம். இப்போதெல்லாம் சாந்ததுரையை மயக்குவது எப்படி, கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி என்று டிப்ஸ் வேறு கொடுக்க தொடங்கி விட்டார்கள்! அது தான் சக்தியை கூடுதல் கடுப்பேற்றி இருந்தது!

  

அவன் பெரிய இவன்! அவனை வேறு அவள் மயக்க வேண்டும்!!!

  

“யார் மேல அவ்வளவு கோபம்? பல்லை போட்டு இப்படி கடிக்குறீங்க??? பாவம்ங்க அந்த பல்லு! விடுதலைக் கொடுங்க!” சக்தி பிரியமுடன் நினைத்துக் கொண்டிருந்த SDயே தட்டுடன் அவள் பக்கம் வந்து பேசினான்.

  

சக்தி பதில் சொல்லாமல் தலைவலிக்கிறது எனும் பாணியில் நெற்றியை தடவிக் கொண்டாள்.

  

“தலை வலியா சக்தி? உங்களுக்காக ஸ்பெஷலா பாதாம் அல்வா எடுத்துட்டு வந்தேனே!!!??? அச்சச்சோ இவ்வளவையும் இப்போ நானே சாப்பிட்டு காலி செய்யனுமா!!! சரி பரவாயில்லை!” சொன்னதை நிறைவேற்றுபவனாக ஸ்பூனில் அல்வாவை எடுத்து சாப்பிட தொடங்கினான் SD.

  

சக்தி அவன் பக்கமே பார்க்கவில்லை!

  

“இந்த கமகமக்கும் பாதாம் அல்வா வாசனைக் கூட உங்களை இந்த பக்கம் திரும்ப வைக்கலைனா இது பயங்கரமான தலைவலி தான்! ஈசியா விட்டுறக் கூடாது. என்னை மாதிரி எக்ஸ்பெர்ட்டோட ஹெல்ப் வேணும்!” SD சொன்னதை முழுவதுமாக சக்தி புரிந்துக் கொள்ளும் முன்பே அவளின் பின்னே வந்து நின்றான் அவன். அப்படியே சக்தியின் கையை நெற்றியில்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.