பார்க்க முடியாதுன்னு சொன்னீங்களா?”
வைஜெயந்தி திகைத்துப் போய் பார்த்தாள்.
“என்ன அக்கா அப்படி பார்க்குறீங்க? எத்தனை படம், சீரியல் பார்க்கிறோம்... இது தானே ஸ்டண்டர்டா பசங்களை மிரட்ட சொல்ற வசனம்?”
“ம்ம்ம்...”
“நீங்க சொன்னதை வச்சு பார்த்தால், ப்ரியா கொஞ்சம் சென்டிமென்ட்டல் டைப்ன்னு தோணுது... இப்படி எல்லாம் சொன்னால் கட்டாயம் கேட்பா... இந்த தடவை கட் அண்ட் ரைட்டா பேசிடுங்க... அவள் கேட்கலைன்னா ஒரு இரண்டு நாள் பேசாமலும் இருங்க...”
“பேசாமலா?”
“ஆமாம் அக்கா, உங்க மருமகள் சந்தோஷமா வாழனுமா வேண்டாமா?”
“இது என்ன கேள்வி ராஜம், அவ சந்தோஷமா, நீடூழி வாழனும்...”
ஹாலில் இருந்தப் படி, சமையலறையில் நடந்த பேச்சை கவனித்துக் கொண்டிருந்த கணபதியும், குணாளனும் தங்களுக்குள் புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.
“சித்தின்னா சித்தி தான்! எப்படி அம்மாக்கு ஐடியா சொல்லி தராங்க பார்த்தீங்களா சித்தப்பா!”
“ஆமாம்டா உன் சித்தி அந்த காலத்து சினிமால வர நடிகை லலிதாவை மாதிரி... இந்த பொய், தந்திரம், மந்திரம் எல்லாம் அவளுக்கு கை வந்த கலை!” என கணபதியும் சொல்லி சிரித்தார்!
கணபதி, வைஜெயந்தியின் கணவன் தண்டபாணிக்கு தூரத்து உறவு. தண்டபாணி இறந்து பல வருடங்கள் ஆன பின்பும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நட்பு நிலைத்திருந்தது. ப்ரியாவை சந்திக்க சென்னை செல்லும் போதெல்லாம் கணபதியின் வீட்டிற்கு வருவது வைஜெயந்தியின் வாடிக்கை. இதற்காகவே தன்னுடைய கிராமத்தில் இருந்து முன்பே கிளம்பி