தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 06 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
‘அவனை’ நேராகப் பார்க்க போகிறாளா? கிருத்திகாவினுள் என்ன எல்லாமோ செய்தது!!!
நிழலாக வந்தே அவளை அப்படி அலைக் கழித்தவனை நேராக பார்க்கும் போது எப்படி இருக்கும்?
மனம் படபடத்தாலும், ஆர்வமும் எழ... மெல்ல நடந்து, மற்ற மூவருக்கும் பின்னே மறைந்து நின்றாள் அவள்...
அவளின் மனம் முழுக்க ஆர்வமும், கூடவே எங்கிருந்தோ கொசுறாக வந்திருந்த வெட்கமும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன...!!!
“அது மாமா, அத்தை... அவங்க பின்னால இருக்குறது தியாகுவோட அம்மா, அப்பா... அந்த பக்கம் இருக்குறது விஷ்ணு, ஷிவா... அது தான் தியாகு...” கீதா கிரிக்கெட் ரன்னிங் கமண்டரி போல காரில் இருந்து இறங்கியவர்களை யார் யார் என அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்...
கிருத்திகா கீதா, மிருதுளா, ராஜம்மாள் என மூன்றுப் பேரின் பின்னே மறைந்து நின்றிருந்ததால், அவளால் எந்த தயக்கமும் இல்லாமல் வந்தவர்களை பார்க்க முடிந்தது...
கீதா சொன்ன தியாகுவின் மீது கிருத்திகாவின் பார்வை பதிந்தது...
அவன் ஆறடி உயரம் இருக்க கூடும்... அந்த உயரத்திற்கு ஏற்ற உடற்கட்டை பெற்றிருந்தான்... அவனின் முகத்தில் என்ன என்று விவரிக்க முடியாத ஒரு வசீகரம் இருந்தது... அலையலையாக காற்றில் சிலுசிலுத்த அவனின் கருநிற கேசம் கிருத்திகாவின் மனதையும் சிலிர்க்க வைத்தது...
அவன் அணிந்திருந்த டார்க் ப்ளூ ஃபுல் ஹான்ட் ஷர்ட்டும், க்ரீம் நிற பேன்ட்டும் அவனை கம்பீரமாக காட்டியது!
இவன் தான் அவள் நினைவில் தோன்றியவனா??? கிருத்திகாவினால் எளிதாக அதற்கு பதில்