தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 05 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“நாலு மணி நேரத்துல இங்கேயே வந்திருவாங்களா!! பரவாயில்லையே,” என்றாள் மிருதுளா பாராட்டும் விதமாக!
“தியாகு அண்ணாக்கு சிறகு மட்டும் இருந்திருந்தா பறந்தே வந்திருப்பார்... பிரின்சஸ் இங்கே இருக்கும் போது, அவர் வேற என்ன செய்வார்,” என்றாள் கீதா!
மிருதுளா கிருத்திகாவை கேலி மின்ன பார்த்தாள்... கிருத்திகாவின் முகம் அழகாக சிவந்தது...
கீதா வெட்கப் படும் கிருத்திகாவையே ஆச்சர்யம் மின்ன பார்த்துக் கொண்டிருந்தாள்...! அதை கவனித்த மிருதுளா,
“என்ன உங்க அண்ணாக்கு போட்டியா நீங்க அவளை இப்படி பார்க்குறீங்க,” என்றாள்!
“இல்லை, பிரின்சஸ் அழகுன்னு தெரியும். ஆனால், வெட்கப் படும் போது இவ்வளவு அழகுன்னு இப்போ தான் தெரியுது...” கீதா இப்போதும் கிருத்திகாவையே பார்த்துக் கொண்டு பதில் சொன்னாள்!
“ஏன், அவ வெட்கப்பட்டு நீங்க பார்த்ததில்லையா? அவ கல்யாண டைம்ல நீங்க இல்லையா?”
கீதா மிருதுளாவிற்கு உடனடியாக பதில் சொல்லாமல் ஒரு குறுகுறு பார்வையை கிருத்திகா பக்கம் பார்த்தாள்.
புரியாமல் கிருத்திகா விழிக்க, மிருதுளா கேள்வியுடன் கீதாவைப் பார்த்தாள்.
“தியாகு பிரின்சஸ் கல்யாண டைம்ல நான் இல்லாமல் என்ன... இருந்தேன்... ஆனால், அப்போ வெட்கப்பப்ட்டது எல்லாம் தியாகு தான்,” என்றாள் கீதா நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டே...
விஜய் கீதாவின் பசி பற்றி சொன்னது அப்போது தான் மிருதுளாவிற்கு நினைவுக்கு வந்தது!
"அச்சச்சோ!!! எங்க ஆர்வக் கோளாறுல உங்களை சாப்பிட சொல்லவே இல்லை பாருங்க! நீங்க