(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

இழக்க முடியாது அவங்க இங்கதான் இருக்கனும்”

  

”அப்ப நானு”

  

”நீ போ வெளிய போ”

  

”போன்னா எங்க போறது”

  

”அது உன்னோட விருப்பம், எப்ப நான் கட்டின தாலியை நானே கழட்டிட்டேனோ, இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதை ஊரே பார்த்திடுச்சி, இனி யார்க்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, நீ மூர்த்திகிட்ட போவியோ இல்லை உன் வீட்டுக்குப் போவியோ, அது உன்னோட பிரச்சனை கிளம்பி போ” என கத்திவிட்டு தன் தாயிடம்

  

”அம்மா போகாதம்மா அவள் போயிடுவாம்மா”

  

”நான் எங்கயும் போக மாட்டேன் மாமா” என்றாள் ஜானகி திடமாக

  

அவனோ நொந்துப போய் தன் தாய் தந்தையை பிடித்துக் கொண்டான், கெஞ்சினான், கதறினான், துடித்தான், அழுதான், எதற்கும் அவர்கள் மனம் இரங்கவில்லை, அவனை தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சென்றார்கள்.

  

வீடே இப்போது மசானம் போல மாறிவிட்டது. ஜானகியும் கண்ணீருடன் நின்றிருக்க நிற்க பலமின்றி தரையில் விழுந்தான் வேங்கையன், வீரசிங்கமும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு பண்ணை வீட்டிற்குச் செல்ல மஹதியோ வேங்கையனை நினைத்தபடியே தன் ஊருக்கு தன் பெற்றோருடன் சென்றுக் கொண்டிருந்தாள்.

  

தொடரும்...

Go to Chinna Marumagal story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.