"தேங்க்ஸ் ஆர்த்தி. என்னவோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்... எதுவா இருந்தாலும் இதே போல என் கிட்ட நேராவே கேளு, ஓகே?"
"சரி விக்கி...” என்ற ஆர்த்தியின் முகம் கூட இப்போது தெளிவாகி தான் இருந்தது!
🌼🌸❀✿🌷
காஃபி கப்பை கையில் எடுத்துக் கொண்டு அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தாள் வர்ஷா.
"என்னம்மா, மருமகள் வந்தப்புறம் என்ன எல்லாம் நடக்குமோன்னு இப்போவே பயமா இருக்கா?"
"வாயாடி சும்மா இரு! அப்படி எல்லாம் எதுவுமில்லை... ஆர்த்தி ரொம்ப நல்ல பொண்ணு... அவ குடும்பமும் நல்ல குடும்பம்..." என்றாள் ராஜம்.
"ம்ம்ம்... அதெல்லாம் இல்லைன்னு நானும் சொல்லலை... ஆனால் நம்ம ஃபேமிலிக்கு சரியா வருமா அம்மா?"
"வர்ஷா, நீ சின்ன பொண்ணு. இது மாதிரி பெரிய மனுஷி போல எல்லாம் பேச்சு ஏன்?"
"க்கும்...! அவங்க விக்கின்னு ஏன் கூப்பிடுறீங்கன்னு கேட்ட உடனே உங்க முகம் போன போக்கை தான் நானும் பார்த்தேனே..."
"ஹுஹும்... இல்லை வர்ஷா... இந்த உலகத்தில பொண்ணா பிறப்பதே தப்பு தான்... அம்மா இல்லாத என்னை சின்ன வயசில் இருந்து வளர்த்தது என் அத்தை... ஆனால் என் கல்யாணம் போது அவங்க கல்யாண மேடை பக்கம் கூட வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க! அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க கூட விடலை..."
"ஏன்ம்மா?"