தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 11 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கணபதி, ராஜம், வர்ஷா காரை நோக்கி செல்ல, ஆர்த்தியின் பெற்றோரும் அவர்களை வழி அனுப்ப அவர்களுடனே சென்றார்கள்.
சற்றே பின் தங்கிய விக்கிராந்த், ஆர்த்தியிடம்,
"என்ன ஆச்சு ஆர்த்தி? உன் முகமே சரி இல்லை? உனக்கு பிடிக்காத மாதிரி யாராவது ஏதாவது சொன்னாங்களா என்ன?" எனக் கேட்டான்.
ஆர்த்தியின் முகத்தில் சட்டென ஒளி வந்தது... அவளின் சின்ன முக வருத்தத்தை கூட விக்கிராந்த் அவனாகவே கண்டுப்பிடித்து தானாக வந்து கேட்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது...
"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே விக்கி?"
"ஹுஹும்ம்... சொல்லும்மா... என்ன?"
"உங்க அம்மா அப்பா மதுரையிலேயே தானே இருப்பாங்க? இல்ல இப்போ டெம்பரரியா மதுரையில் இருக்காங்களா?"
"அம்மா அப்பாக்கு மதுரையில் இருக்க தான் பிடிச்சிருக்கு, நான் தான் சென்னைக்கு வந்து இருக்க சொல்லி கேட்டுட்டு இருக்கேன்... இப்போ வர்ஷாவும் சென்னையிலேயே வேலைக்கு சேர போறதால மனசை மாத்திப்பாங்கன்னு நினைக்கிறேன்..."
ஆர்த்தி அமைதியாக ஒரு சில வினாடிகள் யோசித்தாள்... பின்,
"ஏன் அப்படி? மதுரையில ஹாஸ்பிட்டல் இல்லையா என்ன? அங்கேயே உங்க தங்கைக்கு வேலை கிடைக்குமே! வேணும்னா சொல்லுங்க நான் அப்பா கிட்ட கேட்டு அரேன்ஜ் செய்து தர சொல்றேன்..." என்றாள்.
விக்கிராந்த் ஆர்த்தியை உற்று நோக்கினான்...! அவனுக்கு இன்னமும் ஆர்த்தியின் பேச்சுக்கான