“அவளுக்கு தான் வேலை இல்லை, நீங்களுமா?” என்றாள் ப்ரியா கோகிலாவை பார்த்து!
“ஆமாமாம், நான் தான் வேலை இல்லாமல் தனியா உட்கார்ந்து சிரிச்சிட்டு இருக்கேன்...” என்றாள் ஸ்ரீ கேலியாக!
“ஸ்ரீ, தெரியாம சிரிச்சிட்டேன் என்னை மன்னிச்சு விட்டுடேன்...”
“போ, பொழைச்சு போ...”
“ஏன் ஸ்ரீ, நம்ம ப்ரியா யாரையும் நீ வான்னு பேச மாட்டேன்னு அடம் பிடிப்பாளே... நீ மட்டும் எப்படி அவளை மாத்தின?” கோகிலா சீரியஸாகவே ஸ்ரீயிடம் சந்தேகம் கேட்டாள்!
“அது பெரிசா எதுவுமில்லை கோகிலா, மரியாதை கொடுத்துப் பேசினா, தினமும் குறைஞ்சது ஒரு பத்து ஜோக் கேட்கனும்னு சொன்னேன்... அவ்வளவு தான் மேடம் சரணாகதி அடைஞ்சிட்டாங்க!!!”
“ஹா ஹா ஹா... சூப்பர் ஸ்ரீ! நீ யாரு!!!”
“அது தானே நான் யார், என் ஜோக்கோட ஸ்பெஷாலிட்டி என்ன?”
“அப்படி என்ன ஸ்பெஷல்?”
“உங்களுக்கு தெரியாதா அது? எங்க கல்யாணம் முடிஞ்சப்போ நான் வேலைக்கு போவேன்னு அடம் பிடிச்சேன், என் மாமியார் அதெல்லாம் வேண்டவே வேண்டாம்னு கறாரா சொல்லிட்டாங்க... இவர் அவங்க வார்த்தையை மீறி ஒரு வார்த்தையும் பேச மாட்டாரே... ஆனால் நாம சும்மா விட்ருவோமா! ஒரே மாசத்தில அவங்களையே என்னை வேலைக்கு போக சொல்ல வச்சுட்டோமுல!”
“எப்படி ஜோக் சொல்லியா?”