(Reading time: 7 - 13 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

அதுவரை மகிழ்ச்சி பொங்க வந்த ஆர்த்தியின் முகம் மாறியது... அவள அருகில் நின்றிருந்த வசந்தியும், குமாரும் அம்மன் தரிசனத்தில் தங்களை மறந்திருக்க, ஆர்த்தி மனதினுள் குமுறிக் கொண்டிருந்தாள்!

  

தரிசனம் முடித்து மனதில் மகிழ்ச்சியோடு காரின் அருகில் வந்த ராஜம், அங்கே கை நகங்களை கடித்து துப்பிக் கொண்டிருந்த ஆர்த்தியை பார்த்து,

  

“அடடா, இது என்ன சின்ன குழந்தை மாதிரியான பழக்கம்? ரொம்ப கெட்ட பழக்கம்...” என்றாள் சற்றே கேலியும் கண்டிப்பும் கலந்த குரலில்!

  

“ஹ்க்கும்... எனக்கு கூட தான் நீங்க செய்றது எல்லாம் பிடிக்கலை... அதுக்காக நீங்க அந்த பழக்கத்தை எல்லாம் விட்ருவீங்களா?”

  

குழந்தைத்தனம் மின்ன சொன்ன ஆர்த்தியை வாஞ்சையுடன் பார்த்தாள் ராஜம். இவள் இன்னும் மனதளவில் குழந்தை தான் என நினைத்தபடி,

  

“உனக்கு பிடிக்காட்டி மாத்திக்கிட்டா போச்சு, என்ன விஷயம்ன்னு சொல்லு...” என்றாள்.

  

“விக்கியை எனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போறேன்னு சொல்லிட்டு, எப்போ பாரு அவர் கூடவே நீங்க இருந்தா எப்படி? அவர் பக்கத்தில் போகவே நான் தனியா தவம் இருக்கனும் போல இருக்கே!”

  

“என்ன சொல்ற எனக்கு புரியலையே?” என்றப் போது ராஜமின் குரலில் குழப்பம் இருந்தது.

  

“எங்களுக்கு சீக்கிரமே கல்யாணத்துக்கு நாள் நிச்சயிக்க போறீங்க... முதல் முறையா கோவிலுக்கு வந்திருக்கோம்... பெரியவங்களா, எங்க இரண்டுப் பேரையும் பக்கத்தில் நிக்க வச்சு சாமி கும்மிட சொல்லாம, நீங்க பாட்டுக்கு தனியா போய் உங்க மகன் பக்கத்தில் நின்னா எப்படி?”

  

ராஜமின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி தோன்றியது...!

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Unathu kangalil enathu kanavinai kaana pogiren... story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.