(Reading time: 6 - 12 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

  

“கிட்டத்தட்ட முடிவான மாதிரி தான் அக்கா... நாள் மட்டும் தான் குறிக்கனும்...” ராஜம் எப்போதும் போல சின்ன புன்னகையுடன் பதில் சொன்னாள்!

  

“எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்க வேண்டியது தானே ராஜம்?”

  

“யோசிச்சு என்ன செய்றது? கல்யாணம் செய்துக்க போவது விக்கி...ராந்த் அவனுக்கு பிடிச்ச பொண்ணை தானே கல்யாணம் செய்து வைக்க முடியும்!”

  

“ஆனால் அவன் சந்தோஷமாக இருப்பானான்னும் நீ யோசிக்கனுமே!”

  

“அன்னைக்கு கோவில்ல ஆர்த்தி பேசினதை வச்சு தானே இதை கேட்குறீங்க? ஆர்த்தி நல்ல பொண்ணு தான் அக்கா... அவன் மேல கொஞ்சம் அதிகமா அன்பு வச்சிருக்கா, அவ்வளவு தான்!”

  

“அவ அவனை பார்த்து ஒரு மாசம் ஆச்சா, அதுக்குள்ளே அன்பு கொட்டுதாக்கும்?”

  

“விடுங்க அக்கா, மாமியார் மருமகள் உறவுனாலே அப்படி தானே?”

  

“ம்ம்ம்... ராஜம், உன்னை என்னன்னு சொல்றது? அடடா, கேட்க மறந்தே போயிட்டேனே, ப்ரியாக்கு வரன் பார்க்குறதா சொல்லி இருந்தீயே?”

  

“நான் அதை மறப்பேனா அக்கா? இவர் கூட டீச்சரா வேலை செய்தவர் அவர் சொந்தத்தில் ஒரு பையனை சொல்லி இருக்கார். இன்னும் கொஞ்சம் விபரம் கேட்டுட்டு உங்க கிட்ட சொல்றேன்...”

  

அப்போது அந்த அறைக்குள் வந்த வர்ஷா, வைஜெயந்தியின் பெட்டியின் அருகில் இருந்த சேலையை கையில் எடுத்து பார்த்து வியந்தாள்!

  

“வாவ் ப்யூட்டிஃபுல் ஸாரீ! அம்மா, இந்த கலர் தான் நான் உங்க கிட்ட சொன்னது...”

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.