“என்ன ஆன்ட்டி நீங்க, வர்ஷா அவ்வளவு ஆசைப்படுறாங்க.... நீங்க எடுத்துக்கோங்க வர்ஷா!”
“நீயே அதிசயமா பிடிச்சிருக்குன்னு எடுத்தீயேம்மா...” வைஜெயந்தி ப்ரியாவிடம் வினவினாள்.
“பரவாயில்லை அத்தை, இந்த கலர் என்னை விட வர்ஷாவுக்கு நல்லா இருக்கும்... எனக்கு இது ஜஸ்ட் இன்னுமொரு சாரி அவ்வளவு தான்... அவங்க அவ்வளவு ஆசைப் படுறாங்களே... எந்த பொருளா இருந்தாலும் அதை விரும்பினவங்க கையில இருக்கும் போது தான் அதன் அருமை பெருமை எல்லாம் வெளியே வரும்... இந்த ஸாரீ வர்ஷா கிட்டேயே இருக்கட்டும்...”
பெரியவர்கள் இருவரும் அவள் சொன்னது சரி தான் என்ற அர்த்தத்தில் தலை அசைக்கவும், முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பாய,
“தேங்க்ஸ் ப்ரியா...” என்றாள் வர்ஷா!
ப்ரியா பதிலுக்கு புன்னகை மட்டும் புரிந்தாள்!
“சரிம்மா ப்ரியா, நீ போய் முகம் கழுவி வேற ஸாரீ மாத்திட்டு வா நான் காஃபி போடுறேன்...” என்றாள் வைஜெயந்தி
“சரி அத்தை...!” ப்ரியா தன் பேகில் இருந்து ஒரு சேலையை எடுத்துக் கொண்டு சென்றாள்.
ப்ரியா செல்வதையே பார்த்திருந்த ராஜம்,
“கடவுள், இவளுக்கு இத்தனை பெரிய தண்டனை கொடுத்திருக்க கூடாது! கடவுளை சொல்லி என்ன! அன்னைக்கு நீங்க செஞ்சது தப்பு அக்கா...” என்றாள்.
“எனக்கு அப்போ வேற எதுவும் தோணலை ராஜம்! நான் அதை நினைச்சு வருத்தப்படாத நாளே இல்லை! இவளை இப்படி பார்க்கும் போதெல்லாம் மனசுல அப்படியே என்னவோ போல இருக்கு... அவளுக்கு ஒரு நல்லது நடக்காம எனக்கு எதாவது ஆனால் கூட என் ஆன்மா சாந்தி