அடையாது!”
வைஜெயந்தியின் பேச்சில் இருந்த வருத்தம் புரிந்து, “சரி விடுங்க... பழைய விஷயத்தை பத்தி இப்போ சொல்லி என்ன செய்றது...” என்றாள் ராஜம் அவளை தேற்றும் விதத்தில்!
“அவன் பிறந்த போதே அவனை கொன்னு போட்டிருக்க மாட்டேனா...”
“என்ன பெரியம்மா, யாரை சொல்றீங்க? என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க?” வர்ஷா அம்மாவையும் பெரியம்மாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே கேட்டாள்!
அப்போது தான் வர்ஷா அருகே இருப்பதை பெரியவர்கள் இருவரும் உணர்ந்தார்கள்! உடனே இருவரும் சுதாரித்துக் கொண்டார்கள்!
“இந்த கதை எல்லாம் உனக்கு எதுக்கு வர்ஷா, அது தான் உனக்கு பிடிச்ச ஸாரீ கிடைச்சிடுச்சே. ரூமுக்கு எடுத்துட்டுப் போய் அழகு பாரு...” ராஜம் மெல்ல பேச்சை மாற்றினாள்!
“அழகு பார்க்க தான் அம்மா போறேன்... ஸாரீக்கு மேட்சிங் ப்ளவுஸ் எடுத்து தைக்க கொடுக்கனும்...” என்று தன்னுடைய கவலையுடன் அங்கிருந்து சென்றாள் வர்ஷா.
அவள் போவதற்கு காத்திருந்த ராஜம், பின்,
“அக்கா, நாங்க இங்கே இருக்க வரைக்கும் ப்ரியா இங்கேயே தங்கி இருக்கட்டுமே... இவருடைய ஃப்ரென்ட்ஸ் நிறைய பேர் கிட்ட அவளுக்காக சொல்லி வச்சிருக்கார்... அவள் இங்கேயே இருந்தால் வசதியா இருக்குமே!” என்றாள்!
“நீ இவ்வளவு கேட்கனுமா ராஜி? ப்ரியா இங்கே தான் தங்குவா... நான் சொல்றேன் அவக் கிட்ட...” என்றாள் வைஜெயந்தி.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...