தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 15 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விஜயின் குரலில் யோசனையில் இருந்து வெளியே வந்த தியாகராஜன், உடனடியாக தன்னை சுதாரித்துக் கொண்டு சிரித்தான்!
“விஜய், நீ இதை என் கிட்ட சொல்ற பாரு, அது தான் என் நேரம்...! இப்போ எதுக்கு இங்கே வந்த? இங்கே இருந்து பார்த்தா கீதா தெரிவா அதுக்காக தானே?”
நண்பனின் கிண்டலில் விஜய் முகத்தில் ‘பின்ச்’ வெட்கம் தோன்றியது. ஆனாலும் சமாளித்துக் கொண்டான்!
“எனக்கும் கீதாக்கும் நடுல இருக்கது எல்லாம் எல்லோருக்கும் தெரிஞ்ச யூனிவர்சல் ட்ரூத் கண்ணா!!!!! நான் கீதாவோட தீவிர பக்தன்னு எல்லோருக்குமே தெரியும்... ஆனால், நீ என்னவோ பெரிய துருவாச முனிவர் மாதிரி முறைச்சுட்டு நின்னுட்டு, இப்படி ஓரமா வந்து சைட் அடிக்குற பாரு, அது தான் சரி இல்லை...!!!!”
“ப்ச்... நான் என் மனைவியை சைட் அடிக்குறேன்... பார்த்து ஜொள்ளு விடுறேன்... உனக்கென்ன வந்தது? போ, போய் என் தங்கைக்கு கூஜா தூக்கு...!”
“பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு... அந்த டாக்டர் சொன்ன விஷயம் தான் இடிக்குது... பாவம்டா சித்தப்பா ரொம்ப கலங்கிட்டார்...”
“மாமா கிட்ட பேசி சமாதானப் படுத்தியாச்சு மச்சான்... அதை விடு...” தியாகுவின் கண்கள் கிருத்திகா இருந்த திசையில் சென்றது!
“கலக்குறடா தியாகு!!!! இந்த மாதிரி பேசி சமாளிக்குறதுல உன்னை மிஞ்ச ஆளே இல்லை போ...” விஜயின் கண்களும் நண்பனை தொடர்ந்து பெண்கள் இருந்த பக்கம் போனது!
அங்கே கிருத்திகாவை பார்த்த விஜயின் மனம் தானாக கனிந்தது!
“தியாகு, பிரின்சஸ் இப்படியே இருந்தா நல்லா இருக்கும்ல???”