”சரிண்ணா நான் போய் ராஜகோபால் யார்னு தேடறேன்”
”சரி நானும் நந்தினியை கூட்டிட்டு டாக்டரை போய் பார்க்கறேன்” என கூறவும் அர்ஜூன் விநோதமாக பார்த்துவிட்டு அவள் முன்னாலேயே அவனிடம்
”அண்ணா இந்த பொண்ணு யார்னு தெரியல இன்னும் கொஞ்ச நேரத்தில அவளோட மாமா வீட்டுக்கு போயிடும்”
”சரி போகட்டும் அதை ஏன் என்கிட்ட சொல்ற”
”சொல்லனும்னு தோணிச்சி சொல்லிட்டேன்”
”எனக்கு கேட்க தோணலை நீ கிளம்பு நான் போகனும்” என கூறிவிட்டு அவனை ஜீப்பில் அனுப்பிவிட்டு அவளை பத்திரமாக தன்னுடைய ஏசி காரில் அழைத்துச்சென்றான்.
அவன் செல்வதைக்கண்டு பயந்த அர்ஜூன் ரிஷியின் போக்கை நினைத்து கவலையும் அடைந்தான். அவன் தன் மனதில்
”எப்படியிருந்தாலும் தாத்தாவிற்கு இந்த பொண்ணை பிடிக்கப்போறதில்லை அவர் அந்தஸ்து கவுரவம்னு சொல்லி இவளை விரட்டிடுவாரு. ஏன் தாத்தாவை பத்தி யோசிக்காம இப்படி அந்த பொண்ணுக்காக உருகறாரோன்னு தெரியலையே இல்ல சீக்கிரமா இவளை அவள் மாமாகிட்ட விட்டுடனும் அதான் சரியான வழி” என நினைத்துக்கொண்டு அதற்காகவே ராஜகோபாலை தேடி அலைய ஆரம்பித்தான் அர்ஜுன்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.